வராத கடன் திரும்பி வரவும், எதிரிகளின் தொல்லை நீங்கவும் இந்த ஒரு செடியை வீட்டில் வளர்த்திடுங்கள்

thulasi
- Advertisement -

இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர் மிகவும் ஏழையாகவும், ஒரு சிலர் நடுத்தர வர்க்கத்தினராகவும், ஒரு சிலர் செல்வந்தராகவும் இருக்கின்றனர். ஆனால் ஒருவருடைய வாழ்க்கையை பார்த்து மற்றொருவர் பொறாமை படுவதன் மூலம் அந்த வாழ்க்கை நமக்கு கிடைக்கப்போவதில்லை. ஆனால் ஒருவர் ஏக்கப் பார்வையோடு மற்றவரை பார்ப்பதினால் உண்டாவது தான் கண் திருஷ்டி மற்றும் பொறாமை. இவ்வாறான காரணத்தினாலேயே ஒருவருக்கு ஒருவர் எதிரியாக மாறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில் கடன் பிரச்சனைகளும் ஏராளமாக இருக்கின்றது. சிலர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும், சிலர் கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியாமலும் புலம்பி கொண்டு இருக்கின்றனர். இவ்வாறான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும் இந்த ஒரு செடியை நமது வீட்டில் வளர்ப்பதன் மூலம் பெரும் பலனை அடைய முடியும்.

prabanjam

கருந்துளசி:
மிகவும் சக்தி வாய்ந்தது கருந்துளசி. இது மிகவும் ஆக்ரோச சக்தி நிறைந்தது. எப்பேர்பட்ட எதிரிகளாக இருந்தாலும் அவர்களை வெல்லும் திறன் படைத்தது. பண்டைய காலத்திலெல்லாம் இந்த கருந்துளசியை வைத்து பலவித பரிகாரங்கள் செய்துள்ளதாக வாய்மொழி கதைகளில் கூறப்பட்டுள்ளன. நாட்டை ஆட்சி செய்யும் மன்னர்கள் போருக்கு செல்லும் முன்னர் இந்த கருந்துளசி பரிகாரத்தை செய்த பின்னரே போர்புரிய சென்றுள்ளனர். அவ்வாறு ஆட்சியை பிடிக்கின்ற அளவிற்கு சக்தியை கொடுக்க வல்லது இந்த கருந்துளசி.

- Advertisement -

கருந்துளசியை பெருமளவில் வீடுகளில் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்து வருவார்கள். இவ்வாறு செய்வது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் வீட்டின் முன் பகுதியாக இருந்தாலும், பின் பகுதியாக இருந்தாலும் அல்லது தோட்டமாக இருந்தாலும் அந்த இடத்திலும் கருந்துளசியை வைத்து வளர்த்து வரலாம். இந்த கருந்துளசியினால் பல தரப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.

thulasi-madam

இவ்வாறு தோட்டத்தில் வளர்க்கப்படும் கருந்துளசியின் வேரை எடுத்து அதனுடன் சிறிய செப்புத்தகடு சேர்த்து ஒன்றாக கட்டி அதனை வாகனம் அல்லது வீட்டில் வைப்பதன் மூலம் பணம் வீண் விரயம் ஆவதை தவிர்க்க முடியும். அவ்வாறு ஏதேனும் பிரச்சனைக்குரிய இடங்களுக்கு செல்வதாக இருந்தால் இந்த கருந்துளசியின் வேருடன் பச்சை கற்பூரத்தை சேர்த்து மைபோல அரைத்து அதனை நெற்றியில் வைத்து செல்ல வேண்டும். அப்பொழுது பெரிய பிரச்சனை ஏதும் நேராமல் நமக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

- Advertisement -

அவ்வாறு பல நாட்களுக்கு முன்னர் ஒருவரிடம் கொடுத்து திரும்பி வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பி வருவதற்கு கருந்துளசி வேருடன் சிறிதளவு ஜவ்வாது, திரவிய பட்டை இவை மூன்றையும் சேர்த்து அரைத்து அதனை நெற்றியில் வைத்துக் கொண்டு, கடன் வாங்கியவரிடம் கடனை திருப்பி கேட்க சென்றோம் என்றால் அந்தக் கடன் விரைவில் உங்கள் கையில் வந்து சேர்வதற்கான வழி பிறக்கும்.

karunthulasi

அவ்வாறு நீச்சம் அடைந்த இடத்திற்கு செல்லும் பொழுது பிரேத தோஷம், கன்னி தோஷம் உங்களை அண்டாமல் இருக்க கருந்துளசி வேருடன் சிறிதளவு அடுப்புக் கரியை சேர்த்து கையில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு ஒருவருக்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வாக அமையும் இந்த கருந்துளசியை நிச்சயம் வீட்டில் வைத்து வளர்த்திட வேண்டும்.

- Advertisement -