வீட்டில் தேங்காய் தீபம் இந்த அம்மனுக்கு ஏற்றலாமா? தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய வியக்க வைக்கும் பலன்கள் என்னென்ன?

varahi-coconut-deepam
- Advertisement -

பொதுவாக தேங்காயில் தீபம் ஏற்றும் பழக்கம் அக்காலங்களில் பரவலாக எங்கும் காணப்படவில்லை. காவல் தெய்வம், குல தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய விளக்காக தேங்காய் தீபம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக பெண் தெய்வங்களுக்கு ஏற்றக்கூடிய இந்த தேங்காய் தீபம், ரொம்ப சக்தி வாய்ந்த பலன்களை நல்குமாம். மனம் உருகி தேங்காய் தீபம் ஏற்றி பெண் தெய்வங்களை வழிபட்டால் வேண்டிய வரம் வேண்டிய படியே கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு. இந்த வகையில் இந்த அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய வியக்க வைக்கும் பலன்கள் என்னென்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவல்களாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடிகள் நீங்கும் என்கிற நம்பிக்கை இருந்து வந்துள்ளது. தேங்காயை நல்ல முற்றிய தேங்காயாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக சரி சமமாக உடைத்து மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

- Advertisement -

அதே போல ரொம்பவே சக்தி வாய்ந்த இந்த வராகி அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் வியப்பிற்கு உரியவையாக இருக்கிறது. நாள்பட்ட நோய்கள் நீங்க, வீடு பூமி சார்ந்த பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கவும், வருட கணக்கில் தீராத பிரச்சனைகள் தீரவும், குழந்தை பாக்கியம், திருமண தடை, சொத்து பிரச்சனை, குடும்ப பிரச்சனை என்று எல்லா வகையான பலகால பிரச்சனைகளையும் நொடியில் தீர்க்க வல்ல அற்புத ஆற்றல் இந்த அம்மனுக்கு உண்டு.

ஆசை ஆசையாக கட்டிய வீட்டை பாதியில் கட்ட முடியாமல் அப்படியே விட்டு விடுபவர்கள் உண்டு. சில இடங்களில் அதை விற்று விடுபவர்களும் உண்டு. ஒரு வீடு கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல! அப்படியே கட்டி ஆசையாக குடி போனாலும் அங்கு ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நிம்மதியாக வாழ முடியாது. துர் மரணங்கள், இழப்புகள், நோய்கள் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இது போல அமானுஷ்ய பிரச்சினைகள் இருக்கக்கூடிய வீடுகளில் உள்ளவர்கள் வராகி அம்மனை நினைத்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

- Advertisement -

எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான பரிகாரத்தை செய்யும் பொழுது அதற்கு உரிய பலன்களும் சரியான விதத்தில் கிடைக்கும். அந்த வகையில் மேற்கூறிய இந்த பிரச்சினைகளுக்கு வராகி அம்மன் படத்தை வீட்டில் வைத்து அவருக்கு முன்பாக ஒரு கலசத்தை வைத்து வழிபட வேண்டும். கலசம் உங்களுடைய குலதெய்வ அழைப்பிற்கானது. ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தில் பச்சரிசியை நிரப்பி அதில் சூலம் ஒன்றை சுருக்கி வையுங்கள். அதை மஞ்சள் குங்குமம், பூக்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக ஒரு பெரிய தாம்பூல தட்டில் சுத்தமான பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள்.

பின்னர் தேங்காயை இரண்டாக உடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, இரண்டு வெள்ளைத் திரிகளை அதனுள் போட்டு ஒன்றாக முனைப்பகுதியை மட்டும் திருகி எண்ணெயில் முக்கி வையுங்கள். பின்னர் திரியை வான் நோக்கி மேலே பார்க்குமாறு திருகிவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி வராகி அம்மனை சரணடைந்து முழுமையாக மனமுருகி தீபம் ஏற்றி வழிபடுங்கள். இரண்டு தீபங்களை இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து ஏற்றுங்கள். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஏற்றுவது சிறப்பு. நல்ல நேரம் பார்த்து ஏற்றினால் போதும். இவ்வாறு இந்த தெய்வத்திற்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்தால் தீராத பிரச்சனையும் சுலபமாக தீரும்.

- Advertisement -