வாராகியை பூஜை அறையில் நிரந்தரமாக தங்க வைக்க செய்ய வேண்டிய பரிகாரம்

varahi2
- Advertisement -

இந்த கலியுகத்தில் வாராகியின் வழிபாடு அனைவரின் கஷ்டங்களை தீர்க்கக் கூடிய வழிபாடாக இருக்கின்றது. வராகியை மனதார நினைத்து வழிபாடு செய்தாலே, நம்முடைய துன்பங்களை தீர்க்க அந்த தாய் ஓடோடி வந்து விடுவாள். உக்கிர தெய்வமான இவளுக்கு ரொம்ப ரொம்ப குழந்தை உள்ளம். இவளின் மகிமை, இவளை நம்பிக்கையோடு கும்பிட்டு, இவள் பாதங்களை சரணடைந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

நீங்க வராகியை இதுநாள் வரை வழிபாடு செய்யவில்லை என்றாலும் சரி, இந்த பதிவை படித்த பிறகு வாராகியை வழிபாடு செய்ய தொடங்கி பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நொடி பொழுதில் விலகுவதற்கு இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு நிச்சயம் வழிவகுக்கும்.

- Advertisement -

வராகி வழிபாடு

முதலில் இந்த வழிபாட்டிற்கு நாம் வாங்க வேண்டிய பொருள் மரக்கட்டை மஞ்சள். நாட்டு மருந்து கடைகளில் சென்று மர மஞ்சள் தேவை என்று சொல்லுங்கள். ஒரு விரல் அளவு இந்த வர மஞ்சள் கட்டையை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய மர மஞ்சலை வீட்டிற்கு கொண்டு வந்து அதன் மேலே மஞ்சளை பூசி, மூன்று குங்குமப்பொட்டு வைத்து விடுங்கள்.

இந்த மர மஞ்சள் வாராஹிக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பொருள். பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சின்ன கிண்ணத்தில் இந்த மர மஞ்சளை வைத்து விடவும். இந்த மஞ்சளை வாராஹிதாயாக நினைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் வாராகியின் திருவுருவப்படவில்லை என்றால் இந்த மஞ்சள் தான் உங்கள் வீட்டில் இருக்கும் வாராஹித்தாய்.

- Advertisement -

உங்க வீட்டில் வாராஹிதாயின் திரு உருவப்படம் இருக்குதா. அந்த திருவுருவப்படத்திற்கு முன்பாக இந்த மரமஞ்சளை வைத்து வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது. இப்படி பூஜையறையை அலங்காரம் செய்துவிட்டு, ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும்.

மறக்காமல் வாராஹிக்கு ஒரு நெய்வேதியம் வைத்து விடுங்கள். ‘வராகி தாயே எங்க வீட்டுக்கு வந்துருங்க. எங்க வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி, எங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்து தாங்க’ என்று உரிமையோடு அவளிடம் கேளுங்கள். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கலாம். அல்லது பஞ்சமி திதியில் தொடங்கலாம். ரொம்ப ரொம்ப சிறப்பு.

- Advertisement -

இப்படி நல்ல நாள் பார்த்து தொடங்கிய பூஜையை தொடர்ந்து 12 நாட்கள் செய்ய வேண்டும். 12 நாளும் வீடு சுத்த பத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் தினமும் ஒரு நெய்வேத்தியம் வைத்து விளக்கு ஏற்றப்பட்டு, உங்களுடைய வேண்டுதலை வாராகித் தாயிடம் சொல்லி இந்த பூஜையை பன்னிரண்டு நாள் முழுசாக முடித்து விடுங்கள்.

12 வது நாள் பூஜையை முடித்துவிட்டு, அந்த வர மஞ்சள் கட்டையை எடுத்து, ஒரு மஞ்சள் துணியில் வைத்து சுருட்டி உங்களுடைய நிலை வாசல் படிக்கு உள்பக்கமாக மாட்டி விடலாம். அப்படி இல்லை என்றால் பூஜை அறையில் ஒரு இடத்தில் ஆணி அடித்து இந்த மரக்கட்டையை மாட்டி விடலாம். இப்படி 12 நாள் வராகியை அழைத்து இந்த பூஜையை செய்தீர்கள் என்றால், வாராஹித்தாய் இந்த மர மஞ்சள் கட்டையில் நிரந்தரமாக வந்து அமர்ந்து கொள்வாள்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு வாங்க பராசக்தியை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம்

பிறகு இவள் உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி உங்கள் குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து காத்து ரட்சிப்பால் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது‌. வாராகியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -