சொந்த வீடு வாங்க பராசக்தியை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம்

amman3
- Advertisement -

சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும். சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்குமே இருக்கு. ஆனால் இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் சில சிக்கல்கள் வரும். முதலில் நமக்கு ஜாதக ரீதியாக சொந்தமாக நிலம் வாங்கக்கூடிய அமைப்பு இருக்கணும். சொந்தமாக வீடு வாங்க வேண்டிய அமைப்பு இருக்கணும். அதற்கு செவ்வாய் கிரகத்தின் அனுகிரகம் கிடைக்கணும்.

இந்த அமைப்பு சரியாக இருந்தால் மட்டுமே சொந்தமாக சொத்து வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள் விலகும். உங்களுக்கு ஜாதக கட்டத்தில் செவ்வாய் சரியில்லை. சொந்த வீடு, சொந்த நிலம் வாங்குவதில் தாமதம் இருக்கிறது. அதேபோல நீங்க ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்றீங்க. அதில் வருமானம் சரியாக வரவில்லை. இப்படிப்பட்ட பிரச்சனையை கொண்டவர்கள் பராசக்தியை நினைத்து செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

சொந்த வீடு கட்ட பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் ஒரு கைப்பிடி அளவு மண் தேவை. மேல் பக்கமாக இருக்கக்கூடிய மண்ணை எடுக்காதீங்க. கொஞ்சமாக மண்ணை நகர்த்தி விட்டு, கொஞ்சம் நிலத்துக்கு அடியில் இருக்கக்கூடிய மண்ணை எடுக்கலாம், அல்லது மலை பாங்கான இடம் இருந்தால், அந்த மலைக்கு மேல் பக்கத்தில் மண் எடுக்க முடியும் என்றால் கொஞ்சமாக அந்த மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.

கால் படாத இடத்தில் இருக்கும் மண்ணை, இந்த பூஜைக்கு பயன்படுத்துவது சிறப்பு. ஒரு மண் குடுவை அல்லது பெரிய மண் அகல், ஏதாவது ஒரு மண் சம்பந்தப்பட்ட பாத்திரம் நமக்கு தேவை. அந்த மண்பாண்டத்தில் எடுத்து வைத்திருக்கும் மண்ணை போட்டு விடுங்கள்‌. இந்த மண்ணை உங்களுடைய வீட்டில் பூஜை அறையிலேயே வைக்கலாம். தவறு கிடையாது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமைவரும் சுத்திர ஹோரையில் இந்த மண்ணை எடுத்து பூஜையறையில் வைத்து இந்த பூஜையை தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியிலிருந்து 9:00 மணி வரை சுக்கிர ஹோரை. செவ்வாய்க்கிழமை இந்த நேரத்தில் முதல் முறையாக இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்ய தொடங்க வேண்டும்.

இந்த மண்ணுக்கு மேலே செவ்வரளி பூ அல்லது சிவப்பு ரோஜா ஏதாவது ஒரு பூவை போட்டுவிட்டு ஒரு விளக்கு ஏற்றி வைத்து செவ்வாய் பகவானை மனதார நினைத்து, அந்த பராசக்தியின் மனதில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களுக்கு எந்த வகையில் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கு. அதை சரி செய்ய வேண்டுதலை வைக்கவும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பூஜையை தொடர்ந்து 18 நாட்கள் செய்து முடிக்கவும். தொடர்ந்து வரக்கூடிய 18 நாளும் காலை நேரத்திலேயே இந்த பூஜையை செய்வது சிறப்பு. 18வது நாள் பூஜையை முடித்துவிட்டு இந்த மண்ணை கொண்டு போய் கால் படாத இடத்தில் கொட்டனும். இல்லையென்றால் ஓடுகின்ற தண்ணீரில் கொட்டி விடலாம்.

இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் மகிமை

இப்படி 18 நாள் இந்த மண்ணை பூஜை செய்யும்போது செவ்வாயால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகும். செவ்வாய் கிரகம் உங்களுக்கு பலமாக வேலை செய்யும். ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -