நாளை (25.8.23) வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு அன்று மறக்காமல் இந்த மூன்று பொருட்களை தாயாருக்கு படைத்தால் கலசம் வைத்து வழிபட்ட பலன் கிடைப்பதோடு, வீட்டில் செல்வ வளம் பெருகி குபேர சம்பத்தும் உண்டாகும்.

varalakshmi kalasam
- Advertisement -

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும், கணவருக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டி விரதம் இருந்து வழிபடுவது தான் இந்த வரலட்சுமி விரதத்தின் முக்கிய சாராம்சம். இந்த வழிபாட்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் செய்வார்கள். ஒரு சிலர் வீட்டில் கலசம் வைத்து தாயாரை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள். ஒரு சிலர் கலசம் வைக்காமலே இந்த விரதத்தை கடைப்பிடித்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் எல்லாம் கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வழிபடுவது என இதில் பல வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகிறார்கள்.

ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் வரலட்சுமி விரதத்தின் போது உங்களுடைய வழிபாட்டு முறைகள் எப்படியானதாக இருப்பினும் இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபடும் போது தாயாரின் அனுகிரகம் கிடைப்பதோடு குபேர சம்பத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சிலருக்கு இந்த வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பழக்கமே இல்லாமலும் இருக்கும் அப்படியானவர்கள் கூட இந்த மூன்று பொருள்களை வைத்து வணங்கினால் அவர்களுக்கும் கலசம் வைத்து வணங்கிய பலனே கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் என்பதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வரலட்சுமி நோன்பு அன்று நாம் வாங்க வேண்டிய பொருள்
இந்த நாளில் நெல்லிக்கனியை வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நெல்லிக்கனி என்றால் சாதாரணமாக கிடைப்பது போல் அல்லாது நல்ல தரமான பெரிய நெல்லிக்கனிகளாக வாங்கி பூஜையறையில் தாயார் படத்திற்கு முன்பாக வைத்து வணங்க வேண்டும். அதுவும் வரலட்சுமி நோன்பு நாளான வெள்ளிக்கிழமை அன்றே தான் இதை வாங்கி படைக்க வேண்டும்.

இந்த நெல்லிக்கனியானது குபேரருக்கும் உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. குபேரர் வறுமையில் துன்பப்படும் போது நெல்லி மரம் வளர்த்து வழிபடுமாறு அவருக்கு உபதேசிக்கப்பட்டதாக சில புராண கதைகள் உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நெல்லி மரம் மகாலட்சுமி தாயார், குபேரர் இருவருக்குமே உகந்தது. ஆகையால் இன்றைய தினத்தில் நெல்லிக்கனியை வாங்கி வைப்பது அதிக சிறப்பினையும் பலனையும் தரும்.

- Advertisement -

இத்துடன் இன்றைய நாளில் கல் உப்பு வாங்க வேண்டும். அது அனைவருக்கும் தெரிந்தது தான். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் கல் உப்பு வாங்குவது வீட்டில் செல்வ கடகத்தை அதிகரிக்கும். இந்த நாளில் மறக்காமல் அதை வாங்கி வைத்து விடுங்கள். இவை அனைத்தும் விட மஞ்சள் நிற துண்டு வாங்க வேண்டும். இது துண்டாக இல்லாமல் ரவிக்கை துணியாக இருந்தால் இன்னுமே சிறப்பு.

இந்த ரவிக்கை துணியோடு குண்டு மஞ்சள் கிழங்கினை வாங்கி வைத்து மகாலட்சுமி தாயாருக்கும் முன் வைத்து படைத்து வணங்கிய பிறகு அதை நீங்கள் உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கும் பொழுது அன்றைய தினத்தில் கலசம் வைத்து வழிபட்டதற்கான முழு பலனையும் இந்த ஒரு வழிபாட்டிலே பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் அதிசயத்தை உங்களால் காண முடியும்.

இந்த வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்து வழிபடுபவர்கள் தங்கள் முறைப்படி வழிப்பட்டு அத்துடன் இந்த மூன்று பொருட்களையும் வைத்து வணங்கலாம். இந்த வழிபாடு தங்களுக்கு கிடையாது என நினைப்பவர்கள் இந்த பொருட்களை மட்டுமாவது அன்றைய தினத்தில் வாங்க வைத்து தாயாரை வழிபட்டு குபேர சம்பத்துடன் நலமாக வாழலாம். இந்த பதிவில் உள்ள கருத்தில் உங்களுக்கு விருப்பம் இருப்பின் இதே போல நாளைய வரலட்சுமி நோன்பினை எளிமையாக கடைப்பிடித்து வழிபடலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -