தினமும் இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் சிவபெருமான் உங்களுக்காக எந்த வரத்தையும் கொடுக்க தயங்க மாட்டார். அந்த மந்திரத்தை நாமும் தவறாமல் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?

sivan
- Advertisement -

இந்த உலகம் சிவமயம். நம்முடைய உயிர் சிவமயம். பஞ்சபூதங்கள் சிவமயம். நாம் காணக்கூடிய பொருட்கள் சிவமயம். உயிருள்ள உயிரற்ற பொருட்கள் எல்லாமே சிவமயம். இது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அந்த எம்பெருமான் இல்லை என்றால் இந்த உலகத்தில் ஒரு அணுவும் அசையாது. ஒரு புல் பூண்டு கூட முளைக்காது. நடந்த நிகழ்வுகள், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள், நடக்கப் போகும் நிகழ்வுகள், எல்லாமே அவன் போடும் கணக்கு. நம்மால் எதுவும் இல்லை.

நாம் எல்லோருக்கும் அப்பனாக திகழும் சிவபெருமானை நினைத்து ஒரு சுலபமான ஆன்மீகம் வழிபாட்டு முறையை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் ஒவ்வொரு கஷ்டம் இருக்கும். பணமிருந்தால் நிம்மதி இருக்காது. நிம்மதி இருந்தால் பணம் இருக்காது. சில பேருக்கு வருமானம் இருக்கும், சொந்த வீடு இருக்கும், வாழ்க்கை துணை இருக்காது. சில பேருக்கு குழந்தை செல்வம் இருக்காது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்களை அந்த எம்பெருமான் கொடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார். அவரிடம் இருந்து அந்த வரத்தை சுலபமான பெற நாம் என்ன செய்வது.

- Advertisement -

எல்லா வழிபாட்டு முறைக்குமே ஒரு சூட்சமம் உள்ளது. அந்த வழியில் சரியாக சென்றால் நிச்சயமாக நாம் வேண்டிய வரங்களை சுலபமாக அடைந்து கொள்ளலாம். உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேணும் என்றாலும் சரி, ஏதோ ஒரு விஷயத்தை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அந்த வேண்டுதல் நிறைவேற இந்த வழிபாட்டு முறையை செய்யுங்கள்.

தினமும் காலையில் எழுந்திருச்சுக்கோங்க. வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள சிவபெருமானின் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். பின் சொல்ல கூடிய மந்திரத்தை முதலில் முழுமையாக படித்து பாருங்கள். அதில் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவை, உடனடியாக முதலில் எந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்யுங்கள். அதற்கான அந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி எல்லாம் சிவமயம். என் அப்பன் சிவனே என்று மனதார சொல்லிவிட்டு, இந்த மந்திரத்தை சொல்ல தொடங்குங்கள்.

- Advertisement -

மொத்த மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய வாழ்க்கைக்கு என்ன தேவை அதை நிறைவேற்றிக் கொள்ள அந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் உச்சரித்தால் போதும். அந்த ஒரு வேண்டுதல் நிறைவேறிய பின்பு, அடுத்த வேண்டுதலுக்கு உண்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கலாம்.

உங்களுக்கான சிவ மந்திரம் இதோ:
நங்சிவயநம – திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம – தேக நோய் நீங்கும்
வங்சிவயநம – யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்

- Advertisement -

ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவய – வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய – விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவய – புத்தி வித்தை மேம்படும்.

நமசிவய – பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய – வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய – நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய – கடன்கள் தீரும்.

நமசிவயவங் – பூமி கிடைக்கும்.
சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் உங்றீம் – வேதானந்த ஞானியாவார்
சிவயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம – சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்.
லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்

ஓம் நமசிவய – வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவயநம – அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய – சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்.

இதையும் படிக்கலாமே: பணம் எப்போதும் தாராளமாக புழங்க இதை மட்டும் தினமும் உங்கள் கைகளில் கொஞ்சம் பூசிக் கொண்டால் போதும் பணத்தை காந்தம் போல ஈர்த்து நிரந்தரமாக கையில் தக்க வைத்து கொள்ளும்.

எல்லாம் ஒரு வரி மந்திரம் தாங்க. உங்களுடைய வாழ்க்கையில் எது பிரச்சனையாக இருக்கிறதோ, அந்த பிரச்சனைக்கு உண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு, தினமும் மந்திரத்தை சொல்லி வாருங்களேன். எல்லாம் உங்களுக்கு சுலபமாக கிடைக்க அந்த சிவபெருமான் வழி வகுப்பார். சிவபெருமானின் மேல் பாரத்தை போட்டு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -