பணம் எப்போதும் தாராளமாக புழங்க இதை மட்டும் தினமும் உங்கள் கைகளில் கொஞ்சம் பூசிக் கொண்டால் போதும் பணத்தை காந்தம் போல ஈர்த்து நிரந்தரமாக கையில் தக்க வைத்து கொள்ளும்.

cash oil
- Advertisement -

இன்றைய காலத்தின் அதிமுக்கிய தேவையான பணத்தை நாம் எவ்வளவு சம்பாதித்து சேர்த்தாலும் பத்தாது என்கிற நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் வர வேண்டிய பணம் வராமலோ அல்லது பணம் வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கும் சமயத்தில் இந்த ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை செய்யும் போது பணம் நம்மை தேடி வருவதற்கான வாய்ப்பு பெருகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு முக்கியமான ஒரு காய் தேவை. இது அந்த காலத்து பெரியவர் கள் அதிகமாக பயன்படுத்தி வந்த மாசிக் காய் தான். இதை முன்பெல்லாம் மருத்துவத்திற்கு அதிகமாக பயன்படுத்தி வந்தாலும் கூட அனைவர் வீட்டிலும் இது கட்டாயமாக இருக்கக் கூடிய பொருள்களில் ஒன்றாக இருந்தது.

- Advertisement -

நம் வீட்டு முன்னோர்கள் இதை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தற்கு காரணம் வெறும் மருத்துவ குணம் மட்டும் இல்லை. இந்த பொருள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் தான். இது பலருக்கு தெரிந்து இருக்கலாம், தெரியாமலும் வைத்திருக்கலாம் ஆனாலும் இதற்கு பணம் ஈர்ப்பு சக்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது.

பணம் கையில் தாராளமாக புழங்க
இந்த பரிகாரத்தை செய்ய ஐந்து மாசிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள். அதை சமையலறையில் ஒரு பாக்சில் போட்டு மூடாமல் திறந்த நிலையில் அப்படியே வைத்து விடுங்கள். இந்தப் பொருள் சமையலறையில் இருக்கும் போது பணத்தை நாம் ஈர்க்கும் ஆற்றலை தரும். ஒரு வீட்டு பூஜை அறை எந்த அளவிற்கு புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவம் சமையலறைக்கு உண்டு. ஆகையால் இந்த பொருளை அங்கு வைக்கும் போது அதன் பலன் இன்னும் சற்று கூடுதலாகவே கிடைக்கும். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்.

- Advertisement -

மாசிக்காய் கிடைக்காதவர்கள் மாசி பொடி வாங்கியும் வைக்கலாம். பொடி வாங்கி வைக்கும் போது அது காற்றில் பறக்க கூடியதாக இருக்கும். எனவே லேசாக மூடி வைத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியை தினமும் சிறிதளவு எடுத்துக் கைகளில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் பணவரவு அதிகரிக்கும்.

இவற்றை எல்லாம் விட இந்த மாசிக்காயின் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி தினந்தோறும் குளித்து முடித்து பூஜை செய்த பிறகு கைகளில் சிறிதளவு தேய்த்துக் கொள்ளும் போது கையில் எப்போதும் பணம் தாராளமாக புழங்கும். அது மட்டும் இன்றி வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.

இதையும் படிக்கலாமே: நாளை வளர்பிறை பஞ்சமி திதி! வருமானம் பெருகிக்கொண்டே செல்ல நாளைய தினம் வாராகி அன்னைக்கு உங்கள் கைகளால் இந்த ஒரு பூவை வைத்து வழிபாடு செய்யுங்கள்.

பணம் எப்போதும் கையில் தாராளமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். எந்த பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்கான பலன் நிச்சயம் உண்டு என்று இந்த கருத்தோடு பதிவினை முடிவு செய்து கொள்ளலாம்

- Advertisement -