வராத பணம் திரும்ப வருவதற்கு 48 நாட்கள் ஏற்ற வேண்டிய தீபம் என்ன? கடன் கொடுத்தவர்கள் எந்த நேரத்தில் கடனை வசூலிப்பது முழு தொகையையும் பெற்று தரும் தெரியுமா?

cash-vilakku-kula-dheivam
- Advertisement -

ஒருவனிடம் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலை எல்லோருக்கும் இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சிலருக்கு கடன் வாங்கி விட்டால் அதை திரும்ப கொடுக்கும் வரை தூக்கம் கூட சரியாக வராது! அடுத்தவர்களுடைய பணத்தில் வாழ்வதை விரும்பாதவர்கள் சீக்கிரம் அந்த கடன் தொகையை எப்படியாவது அடைத்து விடுகின்றனர்.

ஆனால் ஒரு சிலருக்கு வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள். கொடுக்க வேண்டும் என்கிற மனநிலை இருந்தாலும், அதற்கேற்ப சூழ்நிலையும் அவர்களுக்கு அமையாமல் போய்விடும். இப்படி வரவே வராது என்று நினைத்துக் கொண்டிருந்த பணம் உங்களுக்கு திரும்ப வருவதற்கு ஏற்ற வேண்டிய தீபம் என்ன? என்பதைத் தான் ஆன்மீக ரீதியாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

- Advertisement -

ஒருவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்பது உங்கள் தலையாய கடன் மட்டுமல்ல, கடமையும் ஆகும். உழைத்துச் சம்பாதிக்கின்ற பணம் மட்டுமே, நம் உடம்பில் ஒட்டும். எனவே அடுத்தவர்களை ஏமாற்றி வாங்கிய பணத்தில் நீங்கள் சுகம் காண விரும்பினால், அதை வேறு வழியில் இறைவன் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்வார். எனவே கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், மைத்ர முகூர்த்தத்தில் பணம் கொடுத்தால் நிச்சயமாக திரும்ப வரும்.

மைத்ர முகூர்த்தம் என்பது ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மேஷ லக்னம், அஸ்வினி நட்சத்திரம் மற்றும் விருச்சிக லக்னம், அனுஷ நட்சத்திரம் கூடிய நாட்களில் அமையப் பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த ஒன்றரை மணி நேரத்தில் நீங்கள் வாங்கிய கடன் தொகையை எப்படியாவது திரும்ப கொடுத்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையையாவது கடன் வாங்கியவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். உங்களால் முடிந்த தொகையை கொடுத்து விட்டு வாருங்கள். அப்போது தான் உங்கள் சூழ்நிலை மாறி அந்த கடனை எப்படியாவது அடைந்து விடக் கூடிய வழிகள் பிறக்கும்.

- Advertisement -

இந்த சக்தி வாய்ந்த நேரத்தை கடன் வாங்கியவர்கள் மட்டுமல்ல, கடன் கொடுத்தவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். கடன் கொடுத்தவர்கள் இந்த மைத்ர முகூர்த்தம் வருகின்ற நேரத்தில் யாரிடம் இருந்து பணம் வர வேண்டுமோ, அவர்களிடம் சென்று நைசாக பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி வந்து விடுங்கள். இதனால் அவர்கள் உண்மையிலேயே உங்களுக்கு பணம் தரக்கூடாது என்று நினைத்தாலும், அந்த பணம் நிச்சயம் தரக்கூடிய அமைப்பை பெற்று விடுகிறார். இதனால் வராது என்று நினைத்த பணம் கூட உங்கள் கைக்கு எப்படியேனும் வந்துவிடும்.

அது மட்டுமல்லாமல் உங்கள் குலதெய்வத்திற்கு நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து புதிய அகல் விளக்கு ஒன்றை வாங்கி வைத்து தீபம் ஏற்ற வேண்டும். சுத்தமான பசு நெய் இட்டு, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தில் ஒரு மிளகு மற்றும் ஒரு துண்டு சுக்கு சேர்த்து ஏற்றி பாருங்கள், எப்படியாவது உங்களுக்கு சேர வேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து இதே போல காலை, மாலை இரு வேளையும் செய்து பாருங்கள், வராத பணம் வந்து சேரும். இந்த தீப வழிபாடு பணம் மட்டுமல்ல இழந்த பொருட்கள், செல்வங்கள், சொத்துக்கள், உறவுகள் அத்தனையும் திரும்ப வரும் பரிகாரமாகும்.

- Advertisement -