அவ்வளவுதான் இனி வரவே வராதுன்னு நெனச்ச பணம் திரும்ப உங்ககிட்டேயே வருவதற்கு உப்பை இப்படி செய்யுங்கள்!

uppu-cash-salt
- Advertisement -

இப்போதெல்லாம் கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போய் கடன் கொடுத்தவர்கள் தான் அதை நினைத்து கவலைப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. பணத்தை வட்டிக்கு விடுவது என்பது எந்த வகையிலும் சரியானது அல்ல. அதிக வட்டிக்கு விடுபவர்கள் நிலைமை இப்படித்தான் ஆகும். அப்படி இருக்க வராது என்று நினைத்து விட்ட பணம் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்ததாக இருந்தால் நிச்சயம் உங்களிடம் மீண்டும் வருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். அது என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kadan

பொதுவாக கடன் வாங்கியவர்கள் அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதற்கு காரணம், ஒன்று அவர்கள் திருப்பி கொடுக்க கூடாது ஏமாற்றி விட வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் உள்ளவர்களாக இருப்பார்கள். அல்லது உண்மையிலேயே அவர்களிடத்தில் பணம் இருக்காது அதனால் உங்களுக்கு கொடுக்க முடியாமல் போகலாம். இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு உரிய எளிய பரிஹார முறை தான் இது.

- Advertisement -

ஒருவர் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களை சபிப்பது மிகவும் தவறு. கடன் கொடுத்தது உங்களுடைய தவறு, கொடுத்த கடன் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்கிற கவலை அவர்களுக்கு நிச்சயம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது கொடுத்த கடன் வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் நீங்கள் அவர்களை சபித்தால் அது எந்த வகையிலும் அவர்களை பாதிக்காது. கொடுக்கக்கூடாது என்று நினைப்பவர்களை சபிப்பத்தில் பிரச்சனையில்லை ஆனால் கொடுக்க வேண்டும், போதிய பணம் இல்லை என்பவர்களை நீங்கள் சபிப்பது மிகவும் தவறான செயலாகும்.

mahalakshmi

எனவே அதற்கு மாறாக நீங்கள் அவர்களுக்கு மகாலட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டும். அவர்கள் நினைத்தவாறு நம்முடைய பணத்தை கொடுக்க கூடிய அருளை பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் மனதில் வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்வது உசிதமானது. கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்கவே முடியாது என்று கூறலாம்.

- Advertisement -

மகாலட்சுமி ஆனவர் எங்கும் வியாபித்து இருக்கிறார். அவர் கல் உப்பு மற்றும் மஞ்சளில் அதிகமாக பயன்படுத்தப் படுகிறார் எனவே இந்த ரெண்டு பொருளையும் ஒன்றாக செவ்வாய் கிழமையில் அரை பக்கெட் தண்ணீரில் இரவு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் புதன் கிழமை அன்று நீங்கள் காலையில் வாசல் தெளிக்க இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இந்த உப்பும், மஞ்சளும் கலந்த தண்ணீரைக் கொண்டு வாசல் தெளிக்கும் பொழுது உங்களுக்கு யார் பணம் கொடுக்க வேண்டுமோ, அவர்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இன்னார்க்கு, இவ்வளவு கொடுக்க வேண்டும், அதனை எப்படியாவது எனக்கு திருப்பி வந்து விடுமாறு செய் தாயே! என்று மனதார மகாலட்சுமி தாயிடம் வேண்டிக் கொண்டு வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு கொள்ளுங்கள்.

kolam

புதன் கிழமையில் தான் இதை செய்ய வேண்டும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் எனவே புதன் கிழமையில் இவ்வாறு வாசல் தெளித்து கோலமிட கொடுத்த கடன் உங்களிடமே திரும்பி வந்துவிடும். வராது என்று நினைத்த இந்த பணம் உங்களிடம் வருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை முயற்சித்து பார்க்கலாம். பணம் கொடுப்பதற்கு முன்னர் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். உங்கள் சக்திக்கு மீறிய பணத்தை கடனாக ஒருபொழுதும் கொடுக்கக் கூடாது. அதே போல கடன் வாங்குபவர்கள் தங்கள் சக்திக்கு மீறிய கடன் வாங்காமல் இருப்பது இருவருக்கும் நல்லது.

- Advertisement -