வருடப்பிறப்பில் வாராஹி வழிபாடு

varahi4
- Advertisement -

ஜனவரி முதல் நாள், இந்த வருடம் திங்கட்கிழமை பிறக்கவிருக்கின்றது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை 11.51 மணிக்கு பஞ்சமி திதி பிறந்து விட்டது. அந்த பஞ்சமி திதியானது திங்கட்கிழமை 1.1.2024 மதியம் 2.08 மணி வரை இருக்கிறது. ஆகவே திங்கட்கிழமை காலை, ஜனவரி 1ஆம் தேதி வாராகி அன்னைக்கு உங்கள் கையால் இந்த ஒரு மாலையை கட்டி போடுங்கள்.

இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு பணம் கஷ்டம் வராது. நீங்கள் யார்கிட்டயும் கைநீட்டி கடனும் வாங்க மாட்டீங்க. உங்களுக்கு வாராகித்தாய் போதும் போதும் என்ற அளவுக்கு செல்வ வளங்களை அள்ளிக் கொடுப்பாள். நாளைய தினம் ஜனவரி ஒன்றாம் தேதி வாராகி தாய்க்கு என்ன மாலையை கட்டிப்போட்டு, எந்த பிரசாதத்தை வைத்து வழிபாடு செய்யணும், ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

புது வருடத்தில் வாராகி வழிபாடு

இந்த வழிபாட்டை கூடுமானவரை திங்கட்கிழமை காலையிலேயே செய்து விடுங்கள். திங்கட்கிழமை மதியத்திற்கு மேலாக பஞ்சமி திதி முடிந்து விடுகிறது. புது வருடம் காலையிலேயே எழுந்து, சுத்தபத்தமாக குளித்துவிட்டு, விரலி மஞ்சளை எடுத்து, உங்கள் கையால் மாலை கட்டிக் கொள்ளவும். 11 விரளி மஞ்சள், 21 விரலி மஞ்சள், அதற்கு மேலும் கூட வைத்து மாலை கட்டலாம். அது உங்களுடைய விருப்பம். இந்த மாலையை வாராகி அன்னைக்கு போட வேண்டும்.

வீட்டிலேயே வாராஹி திரு உருவப்படம் சிலை இருந்தால், அந்த வாராஹித் தாய்க்கு இந்த மாலையை உங்கள் கையால் சாத்தி, மாதுளை பழ முத்துக்களை உதிர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வாராகி தாய்க்கு வைத்து, வழிபாடு செய்தீர்கள் என்றால், இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுடைய வீட்டில் வாராஹி இல்லையென்றால், வீட்டு அருகில் இருக்கும் கோவிலில் வாராஹியின் சன்னிதானம் இருக்கும். அந்த கோவிலுக்கு இந்த மஞ்சள் மாலையை கொண்டு போய் கொடுத்து, அந்த வாராகி தாய்க்கு போடச்சொல்லி மாதுளை முத்துக்களை நெய்வேதனமாக வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம்.

கூடுமானவரை வாராகி அன்னையைத் தேடிப்போய் இந்த மாலையை போடுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. உங்க வீட்டு பக்கத்திலும் வராகியின் கோவில் இல்லை. உங்கள் வீட்டிலும் வாராகி அன்னையின் படம், திருவுருவ சிலை இல்லை என்ன செய்வது. துர்க்கை அம்மனுக்கு இந்த மாலையை கட்டிப்போட்டு இன்றைய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும். விரலி மஞ்சளுக்கு அத்தனை நேர்மறை ஆற்றல் உள்ளது. விரலி மஞ்சள் கட்டி இந்த புது வருடத்தில் அம்பாளுக்கு சாத்தி மனதார வேண்டிக் கொள்ளுங்கள் பணக்கஷ்டம் தீரனும். கடன் சுமை குறையும்.

இதையும் படிக்கலாமே: டிசம்பர் 31 கஷ்டம் தீர இப்படி குளிங்க

இந்த மாலையைக் கட்டி வீட்டில் இருக்கும் வாராஹி அன்னைக்கு உங்கள் கையால் போட்டு இருந்தால், ஒரு மாதம் கழித்து அந்த மஞ்சளை எடுத்து அரைத்து பெண்கள் முகத்திற்கு பூசி குளிக்கலாம். சமையலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. எளிமையான இந்த பரிகாரத்தை இந்த புது வருடத்தில் செய்து வாராஹி அம்மன் ஆசிர்வாதத்தை அனைவரும் பெற வேண்டும் என்று இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -