வீட்டிற்குள் வறுமையை வரவே விடாமல் தடுக்க இந்த 1 பொருளை கட்டாயம் எல்லோர் வீட்டிலும் இப்படி வைக்க வேண்டும். செல்வ செழிப்போடு உங்கள் தலைமுறை வாழ்வாங்கு வாழும்.

mahalashmi
- Advertisement -

நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த எந்த பாரம்பரியமான விஷயங்களையும் நாம் மாற்றக்கூடாது. நவநாகரீகம் முன்னேற்றம் என்று சொல்லி நிறைய விஷயங்களை இன்று நாம் மாற்றிவிட்டோம். நம்முடைய முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் பாதி என்னவென்றே நம்முடைய தலைமுறைக்கு தெரிவது கிடையாது. நம்முடைய வீடும் சரி நம்முடைய நாடும் சரி கஷ்டப்படுவதற்க்கு இதுவும் கூட ஒரு காரணம் தான். நாம் நம்முடைய பாரம்பரியத்தை மறந்து வேறு ஏதோ ஒரு வழியில் சென்று கொண்டிருக்கின்றோம்.

என்னதான் நவ நாகரீக வளர்ச்சியில் நம் நாடு சென்று கொண்டிருந்தாலும், நம்முடைய தாத்தா நம்முடைய பாட்டி, அம்மா அப்பா என்று நம்முடைய முன்னோர்கள் வழி வந்த பாரம்பரியத்தை நாம் என்றைக்குமே மறக்கக்கூடாது. பாரம்பரியமாக உங்கள் குடும்பம் எதை பின்பற்றி வந்ததோ அதை நீங்களும், உங்களுக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையும் பின்பற்றி வந்தாலே போதும். உங்கள் வீடு சுபிட்சம் பெறும். இது முதல் விஷயம். அந்த காலத்திலிருந்தே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த, தற்போது மறைந்த ஒரு பழக்கத்தைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அந்தக் காலத்தில் அதிகமாக புழக்கத்தில் இருந்தது வெண்கல பாத்திரம். வெண்கலப் பாத்திரத்தில் தானியங்களை சேமித்து வைப்பது என்ற பழக்க வழக்கம் அதிகமாக இருந்தது. காலப்போக்கில் வெண்கலம் பித்தளை செம்பு இதெல்லாம் காணாமல் போய், சில்வர் என்ற ஒரு உலகத்திற்கு இப்போது நாம் மாறிவிட்டோம். சரி, பரவாயில்லை. ஒவ்வொரு வீட்டிலும் சுபிட்சம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் பித்தளை பாத்திரங்கள் புழக்கத்தில் இருக்க வேண்டும்.

இந்த காலத்திற்கு இது சரிப்பட்டு வராது என்றால் ஒரு சிறிய வெண்கல கிண்ணத்தை வாங்கி வீட்டில் வைத்து, அந்த வெண்கலக் கிண்ணம் நிரம்ப பச்சரிசி நெல்லை கொட்டி நிரப்பி பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். பூஜை அறையில் வைக்க சௌகரியம் இல்லை என்றால் சமையல் அறையில் கூட இந்த வெண்கல பாத்திரத்தை நெல் நிரப்பி ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

வெண்கலப் பாத்திரத்தில் இந்த நெல் நிரம்பியிருக்கும் போது ஒரு வீட்டில் தன தானியத்திற்கு பஞ்சம் வராது. செல்வச்செழிப்பு நிறைந்திருக்கும். 16 வகையான செல்வங்களும் ஒரு வீட்டில் நிலையாக நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இந்த ஒரு சிறிய பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். (நிறைய பேர் தங்கள் வீட்டு பரண் மேல் இருந்த வெங்கலம், செப்பு, பித்தளை பாத்திரங்களை கடையில் விலைக்கு போட்டு காசாக மாற்றி விட்டார்கள். ஆனால் அது எல்லாமே ஒரு பொக்கிஷம் என்பது நமக்கு தெரியாமல் போய்விட்டது.)

இதேபோல ஒரு சிறிய செம்பு உருளி உங்களுடைய வரவேற்பறையில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த உருளியில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி 2 சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு கலந்து, அந்த தண்ணீரில் கொஞ்சமாக துளசி இலை, மருதாணி இலை, புதினா இலைகளை போட்டு வைத்தாலும் போதும். மல்லிகைப்பூ கிடைத்தால் அதில் இரண்டை இந்த தண்ணீரில் போட்டு வரவேற்பறையில் அழகாக வைத்துவிடுங்கள். இதிலிருந்து எப்போதும் வெளிவரக்கூடிய நல்ல வாசமானது வீட்டில் இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -