வாட்டி வதைக்கக்கூடிய வெறுமை, வறுமையிலிருந்து வெளிவர வீட்டில் தினமும் இந்த திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். வசந்த காலம் வாழ்க்கையில் வீசத் தொடங்கிவிடும்.

vilakku-deepam
- Advertisement -

வாழ்க்கையில் வறட்சியான வெறுமை வந்துவிட்டாலே, அதன் பின்னால் வறுமை தொற்றிக்கொண்டு வந்துவிடும். எப்போதுமே மன கஷ்டத்தோடு எல்லாம் இழந்தது போல வெறுமையாக இருக்கவே இருக்காதீங்க. அதுதான் கஷ்டத்திற்கு முதல் படி. வெறுமையை விரட்டி அடித்து விட்டு, முயற்சிகளை செய்து கொண்டே இருந்தால் வறுமை நிச்சயம் நம் பக்கம் திரும்பி கூட பார்க்காது. வெறுமை வறுமை இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரு பரிகார முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீடு வெறுமையாக இருக்கிறது என்றால் இருள் சூழ்ந்து இருக்கிறது என்று அர்த்தம். அந்த இருளை விளக்குவதற்காக ஏற்றக்கூடிய வெளிச்சம் தான் இந்த விளக்கு ஒளி. இப்படிப்பட்ட பிரகாசமான வெளிச்சத்தை கொடுக்கக் கூடிய விளக்குக்கு ஒரு பிரத்தியேகமான திரியை தயார் செய்யப் போகின்றோம். இந்த திரி போட்டு தீபம் ஏற்றி வைத்தால் இதிலிருந்து வெளிவரக்கூடிய வெளிச்சம் உங்கள் வாழ்வில் இருக்கும் வெறுமை வறுமை இரண்டையுமே அகற்றி விடும். சோம்பேறித்தனத்தை உங்களிடம் இருந்து விலக்கி வைத்து விடும். சும்மா இருக்கணும் அப்படிங்கிற எண்ணமே உங்களுக்கு வராது. ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டாக்கும்.

- Advertisement -

இந்த விளக்கு திரியை தயார் செய்ய நமக்கு சுத்தமான பன்னீர், ஏலக்காய் தூள், ஜவ்வாது பொடி, இந்த 3 பொருட்கள் தேவை. ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு பன்னீரை ஊற்றி, சிறிதளவு ஜவ்வாது பொடி போட்டு, சிறிதளவு ஏலக்காய் பொடி போட்டு, நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பன்னீரில் உங்கள் வீட்டில் இருக்கும் விளக்கேற்ற பயன்படுத்தும் பஞ்சு திரியை போட்டு நன்றாக நனைத்து ஊற வைத்து விடுங்கள்.

15 நிமிடங்களில் அந்த தண்ணீரை திரி உறிஞ்சிக்கொள்ளும். இப்போது ஈரமான இந்த திரையை நிழலிலேயே நன்றாக காய வைத்து விட்டு பின்பு எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த வாசம் நிறைந்த திரியை கொண்டு தீபம் போட வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்கு எந்த விளக்கில் வேண்டுமென்றாலும் இந்த திரி போட்டு தீபம் ஏற்றலாம். நல்லெண்ணெய் நெய் உங்கள் வீட்டில் எதை உற்றி தீபம் ஏற்றுவீர்களோ அதையே இந்த திரிக்கும் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

- Advertisement -

விளக்கு ஏற்றாத வீட்டில் நிச்சயமாக வறுமை வந்து குடியேறி விடும். என்னதான் மின்விளக்குகளை போட்டு உங்களுடைய வீட்டில் பிரகாசமான ஒளி இருந்தாலும் இந்த தீபத்தின் மூலம் வெளிப்படக்கூடிய வெளிச்சத்தில்தான் வீட்டின் உண்மையான இருள் நீங்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் வறுமை நெருங்காமல் இருக்க, வெறுமை நெருங்காமல் இருக்க தினமும் இந்த திரியை கொண்டு தீபம் ஏற்றி வந்தாலே போதும். இந்த தீபத்திலிருந்து வெளிவரக்கூடிய நல்ல வாசம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் முயற்சி என்பது உங்கள் கையில் தான் உள்ளது. விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வெறுமனே அமர்ந்திருந்தால் கூரையை பிச்சி கொண்டு செல்வம் கொட்டாது. முயற்சிகளை கைவிடாதீர்கள். சும்மாவே இருக்கணும்னு நினைக்காதீங்க. சும்மா இருக்கிற நேரத்தை பயனுள்ளதாக எப்படி மாற்றுவது என்று சிந்தியுங்கள். நேரம் நம்மை விட்டு கடந்து சென்றால் என்றைக்குமே திரும்பி வராது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பதிவினை இதோடு நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -