வீட்டில் வறுமை நிலை நீங்கி மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைத்திட இந்த ஐந்து பொருட்கள் மட்டும் போதும்

LAKSHMI
- Advertisement -

பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்றும், பணம் இல்லாதவர்கள் ஏழைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு மனிதன் பிறக்கும் போது எப்படி பட்ட இடத்தில் பிறக்கிறானோ அதனைப் பொறுத்தே அவனது வாழ்க்கை சூழ்நிலையும் அமைகிறது. ஏழை குடும்பத்தில் பிறக்கும் ஒருவர் கொஞ்சம் தட்டுத்தடுமாறி மிகவும் முயற்சி செய்து தான் மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை பாதையை மிகவும் தெளிவாக நிர்ணயிக்க முடியும். இவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக வேறுபடுகிறது. வறுமை நிலையில் இருக்கும் மனிதன் தனது நிலைமையை மாற்ற அதிக அளவு போராடுகிறான். ஆனால் இந்த போராட்டம் சிறிது காலத்தில் என்னடா இது வாழ்க்கை என்ற அளவிற்கு வெறுப்பினை உண்டாக்குகின்றது. இவ்வாறான வறுமை நிலையை அகற்ற இந்த ஐந்து பொருட்களை வைத்து பூஜை செய்து பாருங்கள். விரைவில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

cash

இந்த பூஜை செய்வதற்காக நமக்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது. அதற்காக முதலில் அன்னபூரணியின் அம்சமாக பார்க்கப்படும் பச்சை அரிசியை இரண்டு கைப்பிடி எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்ததாக இந்தப் பூஜைக்கு தேவைப்படும் மிகவும் முக்கியமான பொருளான குபேர குஞ்சம் அல்லது லட்சுமி குஞ்சம் என்று அழைக்கப்படும் அரிசி அளக்க பயன்படுத்தப்படும் படியை எடுத்து கொள்ள வேண்டும். இந்த படியில் பெருமாள் நாமம் நடுவிலும் நாமத்தின் ஒரு பக்கம் சங்கும் மறுபக்கம் சக்கரமும் பதிந்திருக்கும். இது மிகவும் விசேஷம் வாய்ந்த பொருளாகும்.

- Advertisement -

அதன்பிறகு மகாலட்சுமி தேவியின் அம்சம் பொருந்திய 5 சோழிகள், ஐந்து கோமதி சக்கரம், ஐந்து சிகப்பு குன்றின் மணிகள், 5 தாமரை மணி மாலை, 5 ஒரு ரூபாய் நாணயங்கள் மற்றும் சிறிதளவு வாசனை நிறைந்த மலர்கள், சிறிதளவு சில்லறை நாணயங்கள் இவை அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

sozhi

பிறகு செம்பு அல்லது வெள்ளி தட்டில் முதலில் மூன்று கைப்பிடி அரிசியை இரண்டு கைகளால் அள்ளி சேர்க்கவேண்டும். அதன்மீது படியை வைத்துக்கொண்டு முதலில் அதில் வலது கையால் மூன்று பிடி அரிசியை எடுத்து சேர்க்க வேண்டும். பின்னர் 5 சோழியை எடுத்து படியில் வைக்க வேண்டும். பிறகு மீண்டும் மூன்று கைப்பிடி அரிசியை எடுத்து சேர்த்து, அடுத்ததாக கோமதி சக்கரத்தை அதன் மீது வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மூன்று கைப்பிடி அரிசியை சேர்த்துக் கொண்டு, தாமரைமணி மாலையை அதனுள் வைக்க வேண்டும். அதன்பின் 3 கைப்பிடி அரிசியை சேர்த்து, ஐந்து குன்றின் மணிகளை அவற்றில் வைக்க வேண்டும். பிறகு இறுதியாக மூன்று கைப்பிடி அரிசியை சேர்த்து, அதன் மீது சில்லரை நாணயங்களை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இறுதியாக இவற்றின் மீது ஒரு மலரை வைக்க வேண்டும்.

komathi-sakaram

இவ்வாறு செய்த இதனை பூஜை அறையில் வைத்து தொடர்ந்து வழிபட்டு வர வீட்டில் வறுமை நிலை விலகி, பணம் உங்களிடம் வருவதற்கான வழி பிறக்கும். இவ்வாறு இந்த பூஜையை குபேர பூஜை செய்யும் பொழுதோ அல்லது விசேஷமான பூஜைகளின் பொழுதோ அல்லது எப்பொழுதும் கூட பூஜை அறையில் வைத்து இதனை செய்திடலாம்.

- Advertisement -