உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க தேங்காயை ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் போதுமே! மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து பணம் கொழிக்கும்.

lakshmi-coconut
- Advertisement -

நாம் எவ்வளவு தான் பணத்தை சம்பாதித்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாவிட்டாலும் அதுவும் வறுமை நிலை தான். பணம் வந்த வழியே சென்று கொண்டிருந்தால் தீட்டிய திட்டங்கள் பலவும் பாதியிலேயே நிற்கும். நாம் நினைத்த எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் செய்ய முடியாமல் போகும். இந்த மாதம் இதை வாங்க வேண்டும் என்று ஒரு ஆசை உங்களுக்கு இருந்தால் அது ஏதாவது ஒரு வழியில் தடைபட்டுவிடும். இப்படி ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு நீங்கள் நினைத்தது நடக்காமல் தட்டி சென்று கொண்டே இருந்தால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லை என்பது பொருளாகும். வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையில் இதை செய்து பார்க்க பல்வேறு நன்மைகளை பெறலாம். அது என்ன? என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

gajalakshmi

வீட்டில் இருக்கும் எவ்வளவு கஷ்டங்களும், துன்பங்களும் தீர்வதற்கும், மகாலட்சுமி கடாட்சம் இல்லாத வீடுகளில், மகாலட்சுமி குடியேறவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து விட்டு, பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையின் தரையில் பன்னீர் தெளித்து தலைவாழை இலை ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதில் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும். சிறிதளவு மல்லிகை மலரை அதற்கு சாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய தாம்பூல தட்டில் 108 மல்லிகை பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் குங்குமத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பூஜை தேங்காய்க்கு மல்லிகைப் பூக்களும், குங்குமத்தாலும் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.

pooja-coconut

முதலில் ஒவ்வொரு மல்லிகைப்பூவை எடுத்து தேங்காய்க்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் பொழுதும் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அர்ச்சனை செய்த பின் குங்குமத்தை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் மல்லிகை பூவை அர்ச்சனை செய்து விட்டு, குங்குமத்தை அர்ச்சனை செய்யும் பொழுது அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு தேங்காய்க்கு அர்ச்சனை செய்தால் உங்கள் வீட்டிற்கு உங்களுடைய குல தெய்வம், மகாலட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அவர்களுக்கு நைவேத்தியம் படைக்க சிறிதளவு கல்கண்டு வைத்தால் போதுமானது.

- Advertisement -

மகாலக்ஷ்மி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலக்ஷ்ம்யை நம:

lakshmi-devi

பூஜை நிறைவடைந்த பின் மஞ்சள் தோய்த்த துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த தேங்காயை வைத்து மஞ்சள் நிற நூலினால் நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சை வீட்டின் தலை வாசலுக்கு நடுவில் இருக்கும் ஆணியில் மாட்டி விட வேண்டும். இது போல் தொடர்ந்து ஒன்பது முறை செய்து வர எத்தகைய துன்பங்களும் நீங்கும். மாதம் இரண்டு வெள்ளிக்கிழமைகள் அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை இதை செய்தால் போதும். புதியதாக தேங்காயை மாற்றும் போது பழையதை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும். அதே துணியை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்த பின் வீட்டில் வாரம் வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபம் காண்பித்து வர வேண்டும். இதனால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் அதிகரித்து வறுமை நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் பூஜை மணியை ஆட்டும் பொழுது செய்யக்கூடாத இந்த தவறை நீங்களும் செய்றீங்களா? இனிமே மாத்திக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -