இந்த விளக்கு ஏற்றும் வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பூஜையறையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள்..

- Advertisement -

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையே உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தான். இது நிறைவாக இருந்தாலே போதும் அவர்கள் ஒரு நல்ல நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால் இன்றைய கால சூழ்நிலை அப்படியே வேறாக உள்ளது. ஒரு புறம் வசதி படைத்தவர்கள் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அடுத்த வேளை உணவிற்கு கூட வழியின்றி துன்பப்படுகிறார்கள். இந்த துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட இந்த திரியை கொண்டு தீபம் ஏற்றினால் அவர்களின் வறுமை நிலை மாறும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் வறுமை இல்லா வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் முதலில் நல்ல முறையில் உழைக்க வேண்டும். உழைப்பு என்றைக்கும் ஒருவரை கைவிடாமல் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் எத்தனையோ பேரை பார்த்திருப்போம் காலை முதல் மாலை வரை அவ்வளவு கஷ்டப்பட்டு உழைப்பார்கள், ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. சம்பாதிப்பது எல்லாம் அன்றன்றைக்கு செலவு செய்து அடுத்த வேளை சாப்பாட்டிற்கு ஒன்றும் இல்லாமல் இருப்பார்கள். இந்த நிலை மாறி அவர்களும் ஒரு நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ இந்த தீபம் ஏற்றினால் மாறும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த தீபம் ஏற்ற ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான பன்னீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் சுத்தமான சந்தனத்தை சேர்த்து குழைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் பஞ்சுத் திரியை போட்டு நனைத்து எடுத்து திரியை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தீபத்தை தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து உடன், பூஜை அறையில் விளக்கேற்றும் போது இந்த திரியை போட்டு நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் வேறு எத்தனை தீபங்கள் ஏற்றினாலும், இந்த திரி போட்ட ஒரே ஒரு அகல் தீபம் ஏற்றினால் கூட போதும். ஆனால் இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஆண்கள் ஏற்றுவதை விட, பெண்கள் ஏற்றும் போது அதற்கு இன்னும் பலன் அதிகம். வீட்டில் தீபம் ஏற்றும் பலன் எப்போதும் ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாகவே உண்டு. ஆகையால் இந்த தீபத்தை பெண்கள் ஏற்றுவது மிக மிக சிறந்தது.

இதையும் படிக்கலாமே: வாழ்நாளில் ஒரு பெண் இந்த ஒரு தெய்வத்தை மட்டும் மறக்கவே கூடாது. வாழ்க்கையில் பல கஷ்டங்கள் தொடர்வதற்கு, இந்த வழிபாட்டை மறந்ததும் ஒரு காரணம்தான்.

எப்போதும் பூஜை அறையில் இந்த திரி போட்ட ஒரு விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் எப்போதும் வறுமை என்னும் வார்த்தையை கூட பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லாத அளவிற்கு உங்கள் நிலைமை மாறி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. நம்பிக்கையோடு இந்த ஒரு தீபத்தை ஏற்றி வறுமை இல்லா வளமான வாழக்கையை வாழுங்கள்.

- Advertisement -