குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கி வளமான வாழ்வு கிடைக்க, 90 நாட்கள் இந்த பரிகாரத்தை தவறாமல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்

lakshmi
- Advertisement -

சில குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும், அதாவது சுக போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென்று வறுமை நிலைக்கு வந்து விடுவார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் ராஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர நிலைமைக்கு வந்து இருப்பார்கள். ஒரு சிலருக்கு நடுத்தர வாழ்க்கை கூட இல்லாமல், மோசமான நிலைமைக்கு போய், வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.  இவர்கள் இந்த நிலைமைக்கு வருவதற்கு என்ன காரணம் என்று உணர்வதற்குள்ளேயே அனைத்தும் அவர்களின் கையை விட்டு போய்விடும். இவ்வாறு ஒரு சிலர் தாங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவ வினைகளின் காரணமாகவும், அல்லது இந்த ஜென்மத்தில் மற்றவருக்கு செய்த பாவத்தின் காரணமாகவும் கூட இப்படி அவர்களுக்கான தண்டனை கிடைத்திருக்கலாம். இது போன்ற சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்க, செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இப்படிப்பட்டவர்கள் முடிந்தவரை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சுக்ரஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதாவது சுக்கிர ஓரையில் ஆரம்பித்து 90 நாட்கள் செய்ய வேண்டும். இரும்பு கலக்காத 90 நாணயங்களை எடுத்துக் கொள்ளவும். தினமும் ஒரு நாணயத்தை எடுத்து அதை மஞ்சள் கலந்த நீரால் கழுவி, விளக்கின் பாதத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின் விளக்கைக்  குளிரவைத்து அல்லது விளக்கு தானாகக் குளிர்ந்த பிறகு அந்த நாணயத்தை எடுத்து, ஒரு மஞ்சள் பட்டுத்துணியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதுபோல் தினமும் செய்து 90 ஆவது நாள் அந்த மஞ்சள் பட்டுத்துணியை முடிச்சுப் போட்டுப், பணம் வைக்கும் பீரோ அல்லது கல்லாவில் வைத்துக்கொள்ளவும். மஞ்சள் பட்டுத்துணியில் முதல் நாள் மட்டும் 4 மூலை மற்றும் நடுவில் கொஞ்சம் வாசனைத்திரவியம் தடவவ வேண்டும் அல்லது பன்னீர் தெளிக்க வேண்டும்.

பூஜை செய்யும் காலத்தில் கருப்பு நிறம் தவிர்த்து மஞ்சள்,பொன்னிறம் அல்லது தூய வெண்ணிற ஆடைகளை அணிந்து இறைவனிடம் பூஜை செய்ய வேண்டும். மஞ்சள், பொன்னிறம் அல்லது தூய வெண்ணிறத் துணியை தரையில் விரித்து வைத்து அதன் மேல் அமர்ந்து பூஜித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

- Advertisement -

தினம் 108 தடவைக்குக் குறையாமல் வடக்கு அல்லது மேற்கு நோக்கி பூஜித்து வர வறுமை நீங்கி வளமான வாழ்வு உண்டாகும். இவ்வாறு இந்த பூஜையை செய்யும் பொழுது தாமரை மணிகளை வாங்கிக் கொண்டு, அவற்றை மாலையாக கோர்த்து இந்த தாமரை மணி மாலையை இறைவனுக்கு சாற்ற வேண்டும். இவ்வாறு பூஜை செய்து வருவது சிறந்த பலனை கொடுக்கிறது.

மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
தாரித்ர்ய வினாசகி
ஜகத் ப்ரசூத்யை நமஹ.

- Advertisement -