வெள்ளிக்கிழமை இந்த விளக்கு எரியும் வீட்டில் வறுமை நெருங்காது.

mahalashmi3
- Advertisement -

வறுமையை விரட்டி அடிப்பதற்கு ஒரே வழி, தீப வழிபாடு மட்டும்தான். தீப ஒளியில் இருந்து வரக்கூடிய வெளிச்சத்தில் இருந்து மட்டும்தான் உங்களுடைய வீட்டில் இருந்து வறுமையானது வெளியேறும். எவ்வளவு செலவு செய்து, எவ்வளவு யாகங்கள் செய்து, எந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்தாலும் சரி, தினமும் வீட்டில் விளக்கு ஏற்றக் கூடிய பழக்கம் இருந்தால், உங்க வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது. பஞ்சம் வறுமை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. இதை முதலில் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இது தவிர வீட்டில் இருக்கும் பண கஷ்டத்தை போக்க சில ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. அதில் ஒன்றான தீப வழிபாட்டு முறையைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை. அது என்ன வழிபாடு என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வறுமையை விரட்டும் தீபம்

ஒரு அகல் விளக்கு எடுத்துக்கோங்க. மண் அகல் விளக்கில் இந்த தீபம் ஏற்றுவது தான் சிறப்பு. இதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்குக்கு போடும் திரி ரொம்ப ரொம்ப முக்கியம். பஞ்சு திரியோடு தாமரை தண்டு திரியை இணைத்து திரித்து போடுங்கள். இந்த நெய்யில் இரண்டு டைமண்ட் கற்கண்டுகள். இரண்டு கிராம்பு போட்டு ஏற்றுங்கள்.

இந்த விளக்கில் இருந்து வெளிவரக்கூடிய வாசமானது உங்கள் வீட்டில் வறுமையை தங்க விடாது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் இது போன்ற விளக்கை பூஜை அறையில் ஏற்றி, இந்த தீபச்சுடருக்கு முன்பாக அமர்ந்து மகாலட்சுமி தாயை வேண்டிக் கொண்டால் வீட்டில் இருக்கும் வறுமையானது நீங்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

மகாலட்சுமிக்கு வாரம் தோறும் வெள்ளை நிறத்தில் நெய் சேர்த்த பிரசாதம் வைக்க வேண்டும். அது எந்த பிரசாதமாக இருந்தாலும் சரி. வெள்ளை நிறத்தில் பால் சேர்த்த சர்க்கரை பொங்கல், கற்கண்டு சாதம், வெள்ளை நிறத்தில் பால் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், எது வேண்டுமென்றாலும் செய்து வைக்கலாம். அது உங்களுடைய விருப்பம். தொடர்ந்து வெள்ளிக்கிழமையில் குடும்பத்தோடு அமர்ந்து இந்த பூஜையை செய்து விட்டு ‘ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை சொன்னால் வீட்டில் செல்வ கடாட்சம் நிறைவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: நோன்பின் போது சொல்ல வேண்டிய கௌரி காயத்ரி மந்திரம்

இப்படிப்பட்ட மந்திர வார்த்தைகள் எல்லாம் இப்போது நம்முடைய கைபேசியிலேயே இருக்கிறது. ‘ஓம்’ என்ற வார்த்தை ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தை இப்படிப்பட்ட மந்திரங்களை மாலை 6 மணி அளவில் ஒலிக்க விடுங்கள். இதிலிருந்து வெளிவரும் பாசிட்டிவ் எனர்ஜி உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். அந்த பாசிட்டிவ் எனர்ஜியை உங்களுக்கு தேவையான செல்வ வளத்தை கொடுத்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -