இந்த தவறை வீட்டில் இருக்கும் பெண்கள் செய்தால், கைக்கு வரும் பணம் தங்காமல் போய்விடும். வறுமையும் விரயமும் விடாமல் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும்.

panam
- Advertisement -

வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்கள், வளர்ந்த பிள்ளைகள் வரை எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் கைக்கு வரும் பணம் வீட்டிற்கு போதுமானதாக இல்லை. தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கையில் பணம் தங்குவது கிடையாது. வந்த வருமானம் எந்த வழியில் தான் வெளியே செலவாகிறது என்பதை நம்மால் அலசி ஆராய முடியாது. ஆனால் முதல் தேதி வாங்கிய சம்பளம், மாத கடைசி தேதியில் வீண் விரயமாகி இருக்கும். எவ்வளவு சம்பாதித்தும் சேமிப்பு இல்லையே, எவ்வளவு சம்பாதித்தும் கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியவில்லையே, எவ்வளவு சம்பாதித்தும் வறுமை துரத்திக்கொண்டே இருக்கிறதே! இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? என்று சிந்திப்பவர்களுக்கு சுலபமான ஆன்மீக ரீதியான ஒரு வழி இதோ.

blessing

எந்த ஒரு விஷயத்திலும் நாம் ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது ‘ஆசீர்வாதம்’. ‘ஆ’ என்றால் – பெரியது. ‘சீர்’ – என்றால் சீரான, சமமான. ‘வாதம்’ – என்றால் பஞ்சபூதம். இவைகளை குறிப்பதுதான் ஆசீர்வாதம். வேலைக்கு செல்லும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தினசரி வேலையில் 5 நிமிடத்தை தனியாக ஒதுக்கி அதை இறை வழிபாட்டிற்காக செலவு செய்ய வேண்டும். காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை பூஜை அறையில் கட்டாயம் தீபம் ஏற்றி இறைவனிடம் ஆசீர்வாதத்தை கட்டாயம் பெற வேண்டும்.

- Advertisement -

நமக்கு எவ்வளவோ வேலை இருக்கின்றது. அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம். வாங்கும் சம்பளத்திற்கும் மேலாக கடுமையாக உழைக்கிறோம். நம்மை நாமே பார்த்துக் கொள்வதற்கு கூட சுத்தமாக நேரம் இல்லை‌. இருப்பினும் தினமும் குளிக்காமல் இருக்கின்றோமா. தினமும் சாப்பிடாமல் இருக்கின்றோமா. அல்லது தூங்காமல் தான் இருக்கின்றோமா. மற்ற வேலைகளுக்கு எல்லாம் நேரம் ஒதுக்கி அதை செய்யும் போது, பூஜை புனஸ்காரங்களை செய்வதற்கு மட்டும் நேரம் இல்லை என்று சொல்வது சரியான முறை அல்ல.

vilakku-pray

சுத்தமாக பூஜை செய்வதற்கு நேரமே இல்லை என்றாலும், காலையில் 5 நிமிடம் மாலை நேரத்தில் 5 நிமிடம் பூஜை அறையில் தீபம் ஏற்றி, இறைவனை மனதார பிரார்த்தனை செய்ய மறக்கவே மறக்காதீர்கள். இதன் மூலம் உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். லட்சுமிகடாட்சம் வீட்டில் பெருகும்.

- Advertisement -

இறைவனின் ஆசீர்வாதத்தை பெற்று விட்டு அதன் பின்பு நீங்கள் உழைக்க ஆரம்பித்தால், அந்த உழைப்பின் மூலம் வரக்கூடிய வருமானம் நிச்சயமாக வீண் விரயம் ஆகாமல் இருக்கும். பணம் கையில் தங்கும். ‌ சில பேர் லட்ச ரூபாய் கூட சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் பண கஷ்டம் இருந்து கொண்டே வரும். மன அழுத்தம் இருக்கும். சம்பாதித்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்ய முடியாது. இதற்கெல்லாம் என்ன காரணம். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம், இறைவனின் ஆசீர்வாதமும் இல்லாததுதான். இறைவனின் ஆசீர்வாதம் இல்லாத வீட்டில் பணம் இருந்தும் சந்தோஷம் இருக்காது. இதுதான் உண்மை.

women1

குறிப்பாக நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய அலுவலகப் பணிகளுக்கு என்று எப்படி நேரத்தை ஒதுக்கிகிறீர்களோ, அதே போல் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், உங்கள் குடும்பத்திற்கு வரும் வருமானம் நிலையாக நிலைக்க வேண்டுமென்றால், வீண் விரையங்கள் உங்களை விட்டு விலக வேண்டும் என்றால், வறுமை உங்கள் குடும்பத்தை விட்டு நீங்க வேண்டும் என்றால் நிச்சயமாக பூஜைக்காக தினம்தோறும் வெறும் ஐந்து நிமிட நேரத்தையாவது ஒதுக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் நிம்மதி நிலையாகத் தங்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -