வருமானம் அதிகரிக்க வாராகி அம்மன் வழிபாடு. கண் திருஷ்டியால் நீங்கள் இழந்த அத்தனையையும் மீட்டெடுக்க இந்த வழிபாடு ஒன்றே போதும்.

varahi-cash
- Advertisement -

சில பேர் வியாபாரத்தில் ஓஹோ என கொடிகட்டி பறந்திருப்பார்கள். வருமானம் பல மடங்காக பெருகி லாபம் கொட்டோ கொட்டென கொட்டி இருக்கும். வீடு வாசல் நிலம் புலம் என்று வாங்கி சந்தோஷமாக வாழ்க்கையில் படிப்படியான விரைவான முன்னேற்றத்தை அடைந்திருப்பார்கள். ஆனால் இந்த முன்னேற்றத்தை பார்க்கக்கூடிய சிலரின் கண்பார்வையில் இருந்து வெளிவரக்கூடிய கண் திருஷ்டி ஆனது மிக மிக மோசமானது. நம்முடைய நம்பிக்கை உழைப்பு திறமை இவை எல்லாவற்றையும் ஒரு நொடி பொழுதில் அழிக்கக்கூடிய சக்தியும் கண் திருஷ்டிக்கு உண்டு. கண் திருஷ்டி நம்மை அண்டாமல் இருக்கவும், மன உறுதியோடு வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழவும் வாராகி அம்மன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த வழிபாட்டுக்கு நமக்கு ஒரே ஒரு வெற்றிலையும், ஒரு எலுமிச்சம் பழமும் கட்டாயம் தேவை. வாராஹி அம்மனின் திருவுருவப்படம் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி. இல்லை என்றாலும் சரி. இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வாராகி அம்மனின் திருவுருவப்படம் இருந்தால் அந்த படத்தின் முன்பு விளக்கு ஏற்றி வைத்து விட வேண்டும். திருவுருவப்படம் இல்லை என்றால் தீபத்தை ஏற்றி, தீபச்சுடரை வாராஹி அம்மனாக மனதார நினைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்தவுடன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து அமர்ந்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விளக்கிற்கு முன்பாக ஒரு சிறிய தட்டில் வெற்றிலையின் மேல், எலுமிச்சம் பழத்தை வைத்து விடுங்கள். ஏற்றி வைத்திருக்கும் விளக்கத்திற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி வாராகி அம்மனை முழு மனதோடு நினைத்து ‘ஓம் மோஹி மோஹின்யை நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து, மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வாராகி அம்மனுக்கு நிவேதியமாக கல்கண்டு அல்லது ஏதாவது ஒரு பழவகையை வைத்தால் கூட போதும்.

மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு கற்பூர ஆராதனை காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களை அறியாமலேயே உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் வந்துவிடும். மன உறுதி அதிகரிக்கும். அடுத்தவர்களுடைய கண்பார்வை உங்களின் மீது விழுந்தாலும் அதன் மூலம் பாதிப்புகள் ஏற்படாது. இது தவிர செய்வினை பில்லி சூனியம் போன்ற பாதிப்புகள் உங்களை அண்டாது. கெட்ட சக்தியால் எந்த காலத்திலும் உங்கள் குடும்பத்திற்கு துன்பம் வராது.

- Advertisement -

வாராகி தேவியை மனம் உருகி மேல் சொன்ன மந்திரத்தை உச்சரித்து அழைத்தால் மனம் குளிர்ந்து அந்த அம்பாள் நீங்கள் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தில் வந்து அமர்ந்து கொள்வாள். பூஜை நிறைவடைந்த பின்பு அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி சாறு பிழிந்து சமையலில் சேர்த்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அல்லது சாறு எடுத்தும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக குடிக்கலாம்.

தினமும் உங்களால் எலுமிச்சம் பழத்தை உணவோடு சேர்த்துக் கொள்ள முடியாது என்றால் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதன் மேல் குங்குமத்தை தடவி நிலை வாசலில் வைத்து விடுங்கள். எலுமிச்சம் பழம் காய்ந்த பிறகு அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இந்த பூஜையை தினந்தோறும் செய்ய முடியும் என்பவர்கள் செய்யலாம் அல்லது வாரத்தில் இரண்டு நாள் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் மாதம் தோறும் வரக்கூடிய பஞ்சமி திதி அன்றாவது வாராகி தேவியை நினைத்து இந்த பூஜையை வீட்டில் செய்யும் போது உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு, வாராகி அம்மனின் அரவணைப்பில் வளமாக வாழும் என்ற நம்பிக்கையுடன் அந்த அம்பாளை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -