வீட்டிற்குள் நுழையும் பொழுது மற்றவர்கள் முதலில் பார்க்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? இதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா?

mirror-door-vasal
- Advertisement -

ஒருவர் வீட்டிற்குள் நுழையும் பொழுது எதை முதலில் பார்க்கிறார்களோ, அதைப் பொறுத்தே அவர்களுடைய எண்ணமும் மாறுபடுகிறது என்கிறது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து அமைப்பின்படி கட்டிய வீடுகளில் நுழைவாயிலுக்கு எதிரே வைக்கப்படுகின்ற முக்கிய பொருட்கள், உள்ளே வருபவர்களை நேர்மறையாக சிந்திக்க தூண்டும் வகையாக இருக்கும். இந்த வகையில் வீட்டுக்குள் நுழையும் பொழுது மற்றவர்கள் முதலில் நம் வீட்டில் பார்க்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒருவருடைய வீட்டிற்கு நாம் செல்கிறோம் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள்? என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, நாமும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அதே போல நம் வீட்டிற்கு வருபவர்கள், நம்முடைய மகிழ்ச்சியில் அவர்களும் சந்தோஷப்படுவார்களா? என்று கேட்டால் நமக்கு தெரிவதில்லை.

- Advertisement -

ஒருவரைப் போல் மற்றவர்கள் இருப்பதில்லை எனவே யார் எப்படிப்பட்டவர்கள்? எப்படியான சிந்தனையில் நம்மை அணுகுகிறார்கள்? என்பதை எல்லாம் நம்மால் ஆராய்ச்சி செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்காகத் தான் நம் முன்னோர்கள் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டிற்குள் நுழைந்தவுடன் நிலைக் கண்ணாடியைப் பார்க்கும் படி அமைக்கப்பட வேண்டும் என்று கூறி வைத்திருக்கிறார்கள்.

லோன் வாங்கி வீடு கட்டி 10, 20 வருடம் கடனை அடைக்க நாம் படும் பாடு நமக்கு மட்டுமே தெரியும். வாங்கி வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கியவையாக இருக்கும். ஆனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை எனவே அவர்களுடைய சிந்தனை நாம் எப்படி இதனை சம்பாதித்து இருப்போம்? என்று தான் நினைக்கத் தூண்டும். இது மனிதராக பிறந்த பலருக்கும் இருக்கும் இயற்கையான ஒரு சிந்தனை தான் என்றாலும் இதனால் நமக்கு கண் திருஷ்டி உண்டாகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- Advertisement -

ஒருவர் நம்மை வியப்பாக பார்த்தாலோ அல்லது உள்ளத்தில் நினைத்தாலோ நமக்கு திருஷ்டி ஏற்பட்டு விடுகிறது எனவே வீட்டிற்கு உள்ளே முதலில் வரும் பொழுது நிலைக் கண்ணாடியில் தங்கள் உருவத்தை பார்த்து விட்டு வந்தால், அவர்களுடைய எண்ணம் தீயவையாகவே இருந்தாலும் முற்றிலுமாக மாறுபடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். கண்ணாடியில் தன் பிம்பத்தை, தானே காணும் பொழுது அவர்களுடைய சிந்தனை இது போல் சிந்திக்காது. அங்கு எதிர்மறை சிந்தனைகள் தவிடு பொடியாகி, நேர்மறையாக அவர்களை சிந்திக்க வைக்கும்.

அதுமட்டுமல்லாமல் வீட்டிற்குள் நுழைந்தவுடன் பெரிய அளவில் நிலை கண்ணாடி வைத்திருப்பது, குதிரை லாடம், விநாயகரின் திருவுருவம், கருங்காலி கட்டை போன்றவற்றை திருஷ்டிக்காக வைப்பது வழக்கம். இவற்றின் முகத்தில் விழித்தால் உள்ளே வருபவர்களுடைய எண்ணம் நல்லபடியாக இருக்குமாம். கல் உப்பு, மஞ்சள், வாழைமரம், பூரண கும்பம் போன்றவையும் மங்கள பொருட்களில் ஒன்றாக திகழ்கின்றது. எனவே இத்தகைய மங்கல பொருட்களை பார்த்து விட்டு உள்ளே வருபவர்களுக்கு கெட்ட எண்ணங்கள் ஏற்படுவது இல்லை. நிலைவாசலை எவ்வளவு விலை உயர்ந்ததாக நீங்கள் வாங்கி வீட்டை கட்டியிருந்தாலும் அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து முறையாக வழிபடும் பொழுது சக்தி அதிகரிக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. தினமும் நிலை வாசலுக்கு பூஜை செய்து இரு புறமும் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வாருங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகளும், வெற்றிகள் குவியும்.

- Advertisement -