கணவரின் முன்னேற்றத்திற்கு இனி எந்த தடையும் வராது. மனைவி கையால், கணவருக்கு இந்த திலகத்தை வைத்து வழி அனுப்பும் போது, வெற்றி மேல் வெற்றி குவியும்.

husbund-and-wife
- Advertisement -

குடும்பத் தலைவன் முன்னேற வேண்டும். குடும்பத் தலைவனுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும். குடும்ப தலைவனுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது, என்று குடும்பத் தலைவி முதலில் நினைக்க வேண்டும். அதாவது மனைவி நல்லது நினைத்தால் மட்டும் தான், கணவரால் முன்னேற முடியும். அப்படி இல்லாமல் இன்று தலைகீழாக சூழ்நிலை மாறிவிட்டது. மனைவி வீட்டில் வாயை திறந்தாலே நீ எல்லாம் எங்கு உருப்பட போகிறாய். உன்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. மேலும் மேலும் கடன்காரனாகத் தான் போகிறாய். என்று கணவனை எப்போது பார்த்தாலும் குறை சொல்லி அவரை தாழ்த்திக் கொண்டே பேசுவது. இந்த வார்த்தைகளை மனைவி ஒரு வீட்டில் உச்சரித்தால் நிச்சயமாக அந்தக் கணவரால் முன்னேற முடியாது. அந்த குடும்பத்திற்கும் முன்னேற்றம் இருக்காது. முதலில் இந்த தவறு உங்களுடைய வீட்டில் நடந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

ஏதோ கெட்ட நேரம் கெட்டது நடந்து விட்டது. இனி நல்லதாகவே நடக்கும். இனி வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம் என்று அவரை ஊக்குவிக்கும் வார்த்தைகளை வீட்டில் இருக்கும் மனைவி கட்டாயமாக பேச வேண்டும். பொதுவாக இப்படிப்பட்ட நேர்மறையான விஷயங்களை கடைப்பிடித்தாலே குடும்பத்தில் ஒற்றுமை சீர்குலையாது. சந்தோஷம் கெட்டுப் போகாது. இது முதல் விஷயம்.

- Advertisement -

இது தவிர கணவனின் முன்னேற்றத்திற்கு மனைவி செய்யக்கூடிய ஒரு சின்ன பரிகாரமும் நமக்கு தாந்திரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம். பொதுவாக கணவரின் ஆரோக்கியத்திற்கும், ஆயுள் பலத்திற்கும் மனைவி தினம் தோறும் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இதை மறக்கக்கூடாது. இது அல்லாமல் கொஞ்சம் வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

அந்த குங்குமத்தை உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தை வைத்தோ அல்லது வெற்றிலையை வைத்து ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி மகாலட்சுமிக்கு அந்த குங்குமத்தை அர்ச்சனை செய்து விட்டு எடுத்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த டப்பாவில் இருக்கும் குங்குமத்தில் சிறிய வசம்பு துண்டு ஒன்றை போட்டு விடுங்கள். வசம்பை உங்கள் கையில் வைத்து உங்கள் கணவர் முன்னேற வேண்டும். கணவருக்கு பணக்கஷ்டம் வரக்கூடாது. உங்கள் கணவர் மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் நல்லபடியாக கிடைக்க வேண்டும். அவருக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்களுடைய கணவருக்காக எத்தனை நல்லது நினைக்க முடியுமோ அத்தனை நல்லதையும் நினைத்து அந்த வசம்பை அந்த குங்கும டப்பாவில் போட்டு மூடி விடுங்கள்.

அம்பாளின் அருளும் அந்த குங்குமத்தில் நிறைந்திருக்கிறது. எல்லா நன்மைகளையும் வசியம் செய்யக்கூடிய வசம்பும் அந்த குங்குமத்தில் இருக்கிறது இது எல்லாவற்றையும் விட உங்கள் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் வேண்டிக் கொண்ட பிரார்த்தனையும் இதில் சேர்ந்திருக்கிறது காலை உங்கள் கணவர் வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பும் போது சிறிதளவு இந்த குங்குமத்தை எடுத்து உங்கள் கணவர் நெற்றியில் லேசாக வைத்து விடுங்கள். உங்கள் கணவருக்கு வெற்றி மேல் வெற்றி குவியுதா இல்லையா என்று பிறகு பாருங்கள். நல்ல மனதோடு நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -