பீடை பிடித்த முகம் கூட பிரகாசமான முகமாக மாறும். உங்களை பிடிக்காது என்று ஒதுக்கி வைத்தவர்கள் கூட உங்கள் பின்னே வருவார்கள். தினமும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வந்தால்.

thilagam
- Advertisement -

சில பேருடைய முகம் பார்ப்பதற்கு மிகவும் கலையாக இருக்கும். சில பேருடைய முகம் அந்த கலையை இழந்து இருக்கும். பிறந்ததிலிருந்தே என்னுடைய முகம் வசீகரத் தன்மையோடு இருந்தது. ஆனால், இடையில் சில நாட்களாக எதனால் இப்படி கலையிழந்து காணப்படுகிறது என்றே தெரியவில்லை, என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிறப்பிலிருந்தே என்னுடைய முகம் ராசியில்லாத முகம்தான். என்னை பார்ப்பவர்கள் எல்லாம், தரித்திரம் பிடித்த முகம், விடியா முகம் என்று திட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். என்னுடன் நெருங்கிப் பழகவும் ஆட்கள் கிடையாது என்று சொல்லுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சில பேருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் திடீரென்று இடைப்பட்ட காலத்தில் அவர்களை விட்டு விலகி சென்று இருப்பார்கள். சேர்ந்து தொழில் செய்பவர்களாக இருக்கலாம். சேர்ந்து வாழ்க்கை நடத்திய கணவன் மனைவியாக இருக்கலாம். ஒற்றுமையாக வாழ்ந்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். உடன் இருந்தவர்கள் திடீரென்று நம்மைப் பிடிக்காமல் பிரிந்து சென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -

ஏனென்றால் மேல் சொல்லப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் நம்முடைய முக வசீகரமும் ஒரு காரணமாக இருக்கும். நேற்றுவரை பிடித்த முகம், இன்னைக்கு ஏன் பிடிக்காமல் போனது. ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றலின் தாக்கம். ஏதோ ஒரு தரித்திரம் வந்து நம் முகத்தில் அமர்ந்ததால் கூட இந்த பிரச்சனை வந்து இருக்கலாம் அல்லவா. சரி பரிகாரத்தை பார்த்துவிடுவோம். மிகவும் சுலபமான பரிகாரம். சித்தர்களால் சொல்லப்பட்ட பழமையான பரிகாரம்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மகிழம்பூ வாங்கிக்கொள்ளுங்கள். உலர்ந்த மகிழம் பூ நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். சிவப்பு சந்தனம், பன்னீர். இந்த 3 பொருட்கள் மட்டும் போதும். தேவையான அளவு மகிழம்பூவை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளலாம். ஒரு சிறிய வெற்றிலையில் கொஞ்சமாக மகிழம் பூ பொடி, கொஞ்சமாக சிவப்பு சந்தனம், இரண்டு சொட்டு பன்னீர் விட்டு நன்றாக குழைத்து இதை நெற்றியில் தினமும் திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும். (வெற்றிலை வாடும் வரை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரே வெற்றிலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

தினமும் இதைச் செய்து வந்தாலே போதும். உங்களுடைய முகம் வசீகரமாக மாறிவிடும். குறிப்பாக இந்த நபர் என்னை விட்டு விலகி செல்கின்றார். இந்த நபர் என்னிடம் நெருக்கமாக இருக்க வேண்டும். என்று நினைத்தால், உங்களுடைய நெற்றியில் அந்த திலகத்தை வைக்கும்போது, அந்த நபரின் பெயரை சொல்லி, அந்த நபர் உங்கள் வசம் ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டே திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டுக்கு கணவன் மனைவி பிரச்சினை உள்ளது. மனைவி கணவன் வசியமாக வேண்டும் என்றும், கணவன் மனைவி வசமாக வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அது தவறு ஒன்றும் கிடையாது. (இப்படி எதுவுமே கிடையாது எனும் பட்சத்தில், முகம் மட்டும் பொலிவாக மாற வேண்டுமென்றால், மகாலட்சுமியை நினைத்து இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக்கொண்டால் போதும்.)

ஆனால் மற்றபடி தவறான எந்த வசிய முறைக்கும் இந்த பரிகாரத்தை நம்மால் பயன்படுத்த முடியாது. கெட்ட எண்ணத்தோடு ஒரு மனிதரை வசியம் செய்து நம் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்தால், அதன் மூலம் கெடுதல் நம்மை வந்து சேரும் என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -