இந்த ஒரு வேரை குங்குமத்துடன் சேர்த்து வைத்தால் அனைத்து விதமான வசியமும் ஏற்படும்.

vasiya kunkumam
- Advertisement -

ஒருவர் மீது ஏற்படக்கூடிய ஈர்ப்பை தான் நாம் வசியம் என்று கூறுகிறோம். அவ்வாறு நம்முடைய வாழ்க்கையில் சில விஷயங்கள் நமக்கு முக்கியமாக தேவைப்படும். அப்படிப்பட்ட விஷயங்களை நாம் வசியம் செய்து வைத்துக் கொண்டால் நாம் தான் இந்த வாழ்க்கையில் வெற்றிகரமான ஆளாக திகழ்வோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குங்குமத்துடன் எந்த வேரை வைத்து நாம் நெற்றியில் வைத்துக் கொண்டால் அனைத்து விதமான வசியமும் பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

வசியங்கள் என்று சொல்லும்போது நன்மைகளுக்காகவும் வசியம் செய்வது மற்றும் தீமைகளுக்காகவும் வசியம் செய்வது என்று இரண்டு வகைகளாக பிரிக்கலாம். இந்த பதிவில் நன்மைக்காக செய்யப்படும் ஒரு தாந்த்ரீக பரிகாரத்தை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு தேவைப்படும் வசியம் ஜனவசியம், தனவசியம், சர்வ வசியம். ஜன வசியம் என்பது நம்மை சுற்றி இருக்கக்கூடிய ஜனங்கள் அதாவது மனிதர்களை வசியம் செய்வது. தனவசியம் என்பது பணத்தை வசியம் செய்வது. சர்வ வசியம் என்பது நாம் நினைக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் வசியம் செய்வது.

இந்த வசியத்தை செய்வதற்கு புதிதாக வாங்கிய கண்ணாடி பாட்டில் தேவைப்படும். கண்ணாடி பாட்டில் கிடைக்காதவர்கள் புதிதாக ஏதாவது ஒரு உலோகத்தில் குங்குமத்தை அதிக அளவு போட்டு வைப்பதற்குரிய கிண்ணமாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் டப்பாவை உபயோகப்படுத்தக் கூடாது. அடுத்ததாக இதில் போடுவதற்கு புதிதாக குங்குமத்தை வாங்க வேண்டும். வீட்டில் இருக்கும் குங்குமத்தையும் உபயோகப்படுத்தக் கூடாது.

- Advertisement -

அடுத்ததாக நமக்கு முக்கியமாக தேவைப்படுவது ஒரு வேர். அது தான் செம்பருத்திச் செடியின் வேர். இந்த வேரை நாம் திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் செடியிலிருந்து நம் விரலில் பாதி அளவிற்கு எடுக்க வேண்டும். அவ்வாறு எடுப்பதற்கு முன்பாக மஞ்சள் கலந்த தண்ணீரை செடியில் ஊற்றிவிட்டு “உன்னிடம் இருந்து உன்னுடைய வேரை எடுத்துக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டு வணங்கிய பிறகு எடுக்க வேண்டும்.

செடியிலிருந்து எடுத்த வேரை வீட்டிற்குள் கொண்டு வந்து மறுபடியும் மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு அதை ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த வேரை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்திருக்கும் குங்குமத்தின் மேல் வைத்துவிட்டு அதன் மேல் இரண்டு மல்லிகை பூவை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி போற்றி என்று மகாலட்சுமியின் துதி பாடல்களை பாடி வணங்க வேண்டும். இவ்வாறு செய்த பிறகு தினமும் இந்த குங்குமத்தை நாம் நெற்றியில் வைத்துக் கொண்டால் மகாலட்சுமியே நம் வசப்படுவார் என்று கூறப்படுகிறது. குங்குமம் தீர்ந்த பிறகு மறுபடியும் புதிதாக இதே போல் குங்குமத்தையும் வேரையும் எடுத்து செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உடல் சக்கரங்களை சீராக செயல்பட வைக்க உதவும் கற்பூரவள்ளி.

இந்த முறையில் நாம் செய்து வைத்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். முக்கிய குறிப்பு இதை தீய செயல்களுக்காக பயன்படுத்த கூடாது. அதையும் மீறி பயன்படுத்தினால் அதனால் பாதிப்புகளே ஏற்படும்.

- Advertisement -