இந்த வசிய தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும். ஓஹோன்னு கல்லா கட்டி வீட்டில் லட்ச லட்சமாக சொத்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

nannari-theertham-cash
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் தெய்வங்களும் நல்ல தேவதைகளும் மனம் குளிர்ந்து சாந்தமோடு இருந்தாலே போதும். நமக்கு நடக்க வேண்டிய நல்லது ஒவ்வொன்றாக நடந்து கொண்டே இருக்கும். இதேபோல்தான் தொழில் செய்யும் இடத்திலும் குளிர்ச்சியான சாந்தமான சூழ்நிலை இருக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியை போட்டு வைப்பது குளிர்ச்சி கிடையாது. தீயசக்திகள் எதுவும் இல்லாமல், நல்ல சக்தியானது மனநிறைவோடு நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்கான அர்த்தம் அது. நம் வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் இருக்கக்கூடிய நல்ல சக்திகளை நல்ல தேவதைகளை வசியப்படுத்த, சாந்தப்படுத்த மனம் குளிரச் செய்ய ஒரு வசிய தண்ணீரை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் நன்னாரி வேர். நன்னாரி வேர் பொதுவாகவே ஒரு மனிதனுடைய உடம்பை குளிர செய்யக்கூடிய தன்மை உள்ளது. இந்த நன்னாரி வேருக்கு நம்மை சுற்றி இருக்கக் கூடிய இடத்தையும் குளிர்ச்சியாக வைக்க கூடிய தன்மை உண்டு என்பதாக தாந்திரீக ரீதியான பரிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சுத்தமான செம்பு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு நன்னாரி வேர், 2 சிட்டிகை மஞ்சள் தூள், போட்டு முதல் நாள் இரவே நன்றாக ஊற வைத்து விடுங்கள். இந்த தண்ணீர் பூஜை அறையிலேயே அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு தொழில் செய்யும் இடத்திற்கு கிளம்புவதற்கு முன்பு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த தண்ணீரை உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில் கொஞ்சம் தெளித்துவிட்டு, நீங்களும் உங்களுடைய தலையில் தெளித்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் தண்ணீரை அப்படியே தொழில் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். வேறு ஒரு பாட்டிலில் ஊற்றி எடுத்து சென்றாலும் சரி.

தொழில் செய்யும் இடத்திற்கு சென்று தொழில் செய்யும் இடத்தை சுத்தமாக கூட்டி குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த நன்னாரி வேர் தண்ணீரை தொழில் செய்யும் இடத்திலும் நான்கு திசைகளில் தெளித்து விடுங்கள். அவ்வளவு தான். வாரம்தோறும் செவ்வாய் கிழமை வெள்ளிக் கிழமையில் இந்த தண்ணீரை தெளித்து வந்தால் உங்கள் வீட்டை பிடித்த பீடை விலகும். தொழில் செய்யும் இடத்தில் லாபம் பெருகும். செல்வ வளம் படிப்படியாக உயர்வதை உங்களால் கண்கூடாக காணமுடியும்.

- Advertisement -

குறிப்பிட்ட இத்தனை நாட்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தொடர்ந்து 5 வாரங்கள் வரக்கூடிய செவ்வாய் வெள்ளி கிழமையில் இந்த பரிகாரத்தை செய்து வரும்போதே தொழிலில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தை நன்றாக உணரமுடியும். வியாபாரம் இல்லாத கடையில், வியாபாரம் பெருக தொடங்கும். பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஆக இருந்தால் உற்பத்தி உயரும். லாபம் படிப்படியாக உயரும்.

குறிப்பாக கடந்த சில வருடங்களாக நோய் தொற்றினால் ஏற்பட்ட தொழில் முழக்கங்கள் மீண்டும் சரிவர இயங்கி லாபத்தை கொடுக்க வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக முடங்கிப்போன உங்கள் தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கைமேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -