வாஸ்து தோஷத்தால் வீட்டில் பண கஷ்டமோ, பண விரயமுமோ வராது. இந்த 3 பொருட்களை சேர்த்து ஒன்றாக வைத்தால்.

vasthu
- Advertisement -

நம்முடைய வீட்டில் வாஸ்து தோஷம் வராமல் இருப்பதற்கு வாஸ்து சம்பந்தப்பட்ட நிறைய பொருட்களை வாங்கி வைக்கலாம். ஆனால் அந்த வாஸ்து சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் உயிரோட்டம் நிறைந்ததாக இருக்கிறதா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. பிளாஸ்டிக் அல்லது கண்ணாடியில் ஒரு பொம்மையை வாங்கி வைக்கின்றோம். உதாரணத்திற்கு பிரமிட் அல்லது வாஸ்து கற்கள் இப்படி ஏதோ ஒரு பொருளை வாங்கி வைக்கின்றோம்.

அந்த வாஸ்து பொருட்கள் உயிரோட்டத்துடன் நம்முடைய வீட்டில் செயல்படுகிறதா என்பதை நாம் எப்படி கண்டறிவது. வாஸ்து பொருளை வாங்கி வீட்டில் வைத்த பின்பு சில நல்ல மாற்றங்கள் தெரிய வேண்டும். பண விரயம் குறைய வேண்டும். பண வரவு அதிகரிக்க வேண்டும். வீட்டில் இனம்புரியாத ஒரு மன நிம்மதி கிடைக்க வேண்டும். வாஸ்து சம்பந்தப்பட்ட பொருளை வீட்டில் வாங்கி வைத்த பிறகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை எனும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து பொருட்களுக்கு உயிரோட்டம் இல்லை என்று தான் அர்த்தம்.

- Advertisement -

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும். அது என்னென்ன பொருட்கள். துளசி இலை, வெட்டிவேர், சோம்பு, இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு திறந்தபடி அப்படியே வரவேற்பறையில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இதோடு ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை நசுக்கி போட்டு வைத்துக் கொள்ளலாம்.

வரவேற்பறையில் மட்டும்தான் இதை வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. தேவைப்பட்டால் வரவேற்பறையில் இருக்கும் இந்த பாட்டிலை எடுத்து சமையல் அறையில், பூஜை அறையிலோ படுக்கை அறையிலோ கூட வைத்துக்கொள்ளலாம். இந்த பாட்டிலில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் அந்த இடத்தை நேர்மறையாக மாற்றி கண்ணுக்குத் தெரியாத வாஸ்து தோஷங்கள் இருந்தாலும் கூட அதை சரி செய்து விடும்.

- Advertisement -

வாஸ்து பொருட்களை வைத்திருப்பவர்கள் வீட்டில் தான் இந்த பாட்டிலை வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஓரு வீட்டில் வாஸ்து தோஷம் விலக யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். வெட்டி வேர், சோம்பும் சீக்கிரத்தில் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு கிடையாது. துளசி இலைகள் மட்டும் காய்ந்து போகும் பரவாயில்லை. காய்ந்த துளசி இலைகள் இருந்தாலும் அதற்கு ஒரு மகிமை உண்டு. அதில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் நம்முடைய வீட்டில் எப்போதுமே பரவியிருக்கும்.

படுக்கை அறையில் தூங்கும் போது கெட்ட கனவுகள் வருகிறது என்றால் இதே போல தனியாக ஒரு பாட்டிலில் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்துப் போட்டு நிரந்தரமாக படுக்கையறையில் ஒரு டேபிள் மேலே அழகாக வைத்துக் கொள்ளலாம். ‌ வரவேற்பறையில் நிரந்தரமாக ஒரு பாட்டிலை தயார் செய்து யார் கைக்கும் எட்டாமல் அலமாரிக்கு மேலே வைத்தால் கூட அது பாட்டுக்கு இருந்து கொள்ளும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றினால் கூட போதும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பல பெரிய கஷ்டங்களுக்கு தீர்வு கிடைப்பதை உணரலாம்.

- Advertisement -