வீட்டில் இருக்கும் எவ்வளவு பெரிய வாஸ்து குறைபாட்டையும் சரி செய்யும் ஒரு டம்ளர் தண்ணீர். இனி வாஸ்துவை சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

water-vasthu-vastu
- Advertisement -

வாஸ்து, சமீப காலமாகத்தான் இந்த வாஸ்துவை பற்றி பெரிய அளவில் நாம் பேசி வருகின்றோம். ஆனால் வாஸ்து என்பது இன்றோ நேற்று பிறந்த விஷயம் கிடையாது. ராஜாக்கள் காலத்தில் இருந்து வாஸ்து என்பது இருந்து வருகிறது. வாஸ்துவின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றலாம். நிறைய பேர் வீட்டில் வாஸ்து சரியாக அமையாத காரணத்தினால், குடும்பத்தில் சில பல பிரச்சனைகள் உண்டாகிறது. சில பேர் வீடுகளில் சந்தோஷத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை, தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை, சில பேர் வீட்டில் சண்டை சச்சரவுகள் கூட பெரிய அளவில் இருக்கும். சில வீடுகளில் வாஸ்து சரி இல்லாத காரணத்தினால் குடும்பம் இரண்டு பட்டு போகும். சின்ன வாஸ்து பிரச்சனையாக இருந்தால் சுலபமாக செய்து சரி செய்து விடலாம்.

கட்டிய வீட்டில் பெரிய அளவில் வாஸ்து பிரச்சனை இருக்கிறது. அல்லது வேறு ஏதாவது வாஸ்து தோஷம் இருக்கிறது. அதை சரி செய்ய இலட்சக்கணக்கில் பணம் செலவு ஆகும் எனும் பட்சத்தில் அதை உடனடியாக நம்மால் செய்ய முடியாது. அந்த சமயத்தில் நீங்கள் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். வாஸ்து பிரச்சினையால் வரக்கூடிய பிரச்சனையின் தாக்கம் குறையும்.

- Advertisement -

வாஸ்து தோஷத்தை சரி செய்ய எளிமையான பரிகாரம்:
உங்களுடைய வீட்டின் ஈசானிய மூலை எது என்பதை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். அந்த மூலையில் தினமும் ஒரு கண்ணாடி டம்ளர் நிரம்ப தண்ணீர் வைத்துவிட்டு, அதன் உள்ளே ஒரு செப்பு நாணயத்தை போட்டுவிட்டு, வாஸ்து பகவானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாடு என்றால் பெரிய அளவில் கிடையாது. அந்த டம்ளருக்கு ஒரு மஞ்சள் குங்குமப்பொட்டு வையுங்க. ஒரு ஊதுவத்தை காண்பித்து வழிபாடு செய்தாலும் போதும். மன நிறைவோடு வாஸ்து தோஷத்தால் உங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தினமும் இந்த பிரார்த்தனையை வைத்து வர உங்களுடைய வீட்டில் வாஸ்துவால் உண்டாக்கப்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எளிமையான வழிபாடு தான். இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும். (வழிபாட்டை முடித்துவிட்டாலும் அந்த டம்ளர் தண்ணீர் ஈசானிய மூலையிலேயே இருக்கட்டும். மறுநாள் வழிபாடு செய்யும்போது பழைய தண்ணீரை கொட்டி விட்டு புது தண்ணீர் மாற்ற வேண்டும்.)

- Advertisement -

இதையும் படிக்கலாமே: எவ்வளவு பாடுபட்டாலும் சொந்த நிலத்தை விற்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அங்காரகனுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவிலேயே நிலம் விற்று விடும்.

உங்களுக்கு பிரச்சனை என்று சொல்லி இருக்கக்கூடிய அந்த வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்யும் வரை தினமும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை தினமும் கீழே கொட்டி விட்டு, டம்லரை கழுவி, புது தண்ணீர் ஊற்றி, அதே செம்பு நாணயத்தை மீண்டும் போட்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம். எளிமையான வழிபாடு தான். நம்பிக்கையோடு இதை செய்தால் நன்மை நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -