எவ்வளவு பாடுபட்டாலும் சொந்த நிலத்தை விற்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அங்காரகனுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவிலேயே நிலம் விற்று விடும்.

sevvai deepam
- Advertisement -

அனைவரும் பணத்தை சம்பாதித்து சேர்த்து வைத்து அதன் மூலம் சொத்துக்களை வாங்கி மகிழ்வார்கள். அவ்வாறு வாங்கி மகிழ்பவர்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இக்கட்டான சூழ்நிலை காரணமாக வாங்கிய சொத்தை விற்க நேரிடும். நல்ல இடமாக இருந்தும், அதற்கு நியாயமான விலையை கூறினாலும் சில சமயங்களில் அவர்களால் அந்த இடத்தை விற்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் அங்காரகனுக்கு எப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் நிலம் விரைவிலேயே விற்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பூமி காரகனாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். அவரை நாம் அங்காரகன் என்றும் கூறுவோம். அப்படிப்பட்ட செவ்வாய் பகவான் நம்முடைய ஜாதகத்தில் தீர்க்கமாக இருந்தால் சொந்தமாக வீடு, நிலம் வாங்குவதோ அல்லது விற்பதோ சரியான நேரத்தில் சரியான சமயத்தில் நடைபெறும். ஆனால் அவர் பலகீனமாக இருந்தாலோ அல்லது கெடுப்பலன்களைத் தரும் இடங்களில் இருந்தாலும் இடம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.

- Advertisement -

இடத்தை விற்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன காலியான இடமாக இருந்தாலும் அதற்கும் வாஸ்து என்பது இருக்கத்தான் செய்யும். வாஸ்து சரியாக இல்லாத பட்சத்திலும் இடம் விற்காது. மேலும் சிலர் அதிகமாக விலை வைத்து விற்க முயற்சித்தாலும் இடம் விற்காது. இடத்தில் தோஷம் இருந்தாலும் இடத்தை விற்க முடியாது. ஜாதகத்தில் செவ்வாய் பகவான் கெடு பலன்களை தரும் நிலையில் இருந்தாலும் இடம் விற்காது.

எதனால் இடம் விற்கவில்லை என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவதன் மூலம் இடத்தை விரைவில் விற்க முடியும். செவ்வாய் பகவான் நமக்கு சாதகமாக செயல்பட செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்ப்போம். செவ்வாய் பகவானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுவது செவ்வாய்க்கிழமை தான். செவ்வாய்க்கிழமை அன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அதாவது குரு ஹோரையில் நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் செவ்வாய் பகவானுக்கு அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு அவருக்கு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், கற்கண்டு, உலர் திராட்சை போன்றவற்றை வைத்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இரண்டாவது வாரம் சென்று வழிபடும் பொழுது இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வாராவாரம் ஏறுமுகமாக நெய் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 16 வது வாரம் 16 நெய் தீபங்களை ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து விற்க வேண்டிய இடம் விரைவிலேயே விற்று தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த பரிகாரத்தை நாம் மேற்கொண்டால் இடம் விற்பது மட்டும் அல்லாமல் புதிதாக இடம் வாங்குவது சொந்த வீடு கட்டுவது போன்ற அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பத்தே நிமிடத்தில் குலதெய்வம் உங்கள் இல்லத்தை தேடி வந்து அருள் புரிய ஒரு கைப்பிடி மண்ணை வைத்து இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இது வரை வராமல் ஒதுங்கி நின்ற தெய்வம் கூட மனமிரங்கி வந்து அருள் புரியும்.

இந்த எளிய அங்காரகன் வழிபாட்டை நாமும் மேற்கொண்டு நமக்கு சொந்தமான இடத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்த்து நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வோம்.

- Advertisement -