வாஸ்து பிரச்சனை உள்ள வீட்டை கூட, லஷ்மி கடாக்ஷம் நிறைந்த வீடாக மாற்ற, வாரத்தில் ஒரு நாள் இதை மட்டும் செய்தலே போதும். இனி வாஸ்து தோஷம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

- Advertisement -

ஒரு வீட்டை கட்டும் போதே நாம் பார்த்து பார்த்து தான் ஒவ்வொன்றையும் செய்வோம் அப்படி செய்தும் சில நேரங்களில் நம்மையும் மீறி வீட்டில் வாஸ்து கோளாறுகள் வந்து விடுகிறது. இது சொந்த வீடு கட்டுபவர்களின் பிரச்சனை. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அது அதைவிட பெரிய பிரச்சனை ஏனென்றால் இப்போதெல்லாம் வாடகைக்கு வீடு கிடைப்பதே பெரிய விஷயம் அதில் இந்த வாஸ்து படி தான் வீடு அமைய வேண்டும் என்றால் அதற்கெல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவு காரணம் எதுவாயினும் வாஸ்து தோஷத்தர் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு எளிய முறை தான் இப்போது இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வாஸ்து தோஷம் உள்ள வீட்டை சரி செய்வதற்கு முன்பாக முதலில் ஒரு வீட்டில் எப்பொழுதும் காலை மாலை இரண்டு வேளை தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வீட்டில் மங்கள சொற்களை பேசுவது, மந்திரங்களை ஒலிக்க விடுவது வாசலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூ வைப்பது, வாயிலில் விநாயகர் படம் வைப்பது போன்றவை எல்லாம் வாஸ்து மட்டுமல்ல, பிற எதிர் மறை பிரச்சனைகளையும் நம் வீட்டிற்கு வராமல் தடுக்க நமக்கு நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த மிக மிக எளிய வழிமுறைகள் தான் இவை.

- Advertisement -

இது சாதாரண சின்ன சின்ன பிரச்சனைகளையும் ,எதிர்மறைகளையும் சரி செய்து விடும். ஆனால் இந்த வாஸ்து தோஷத்தினால் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சனையை கூட சாதாரணமாக போக்கக்கூடிய எளிய முறை தான் இந்த தூபம் காட்டும் முறை.

நாம் எப்போதும் வீட்டில் போடும் தூபத்துடன் சில பொருட்களை சேர்த்து போடும் போது வாஸ்து தோஷம் நீங்கி வீட்டில் நல்ல அதிர்வலைகளை உருவாக்கி, அந்த தோஷத்தினால் நமக்கு ஏற்படும் தொல்லைகளை நீக்கும் சக்தி இந்த தூபத்திற்கு உண்டு. அதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெள்ளை குங்கிலியம், கருப்பு உப்பு இவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்புமும், சீரகமும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் இந்த சோம்பும், சீரகமும் புதிதாக வாங்கி எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலையில் குளித்து முடித்து உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றிய பிறகு வீட்டில் சாம்பிராணி போடும் போது, அந்த தூபத்தில் குங்கிலியம், கருப்பு , சோம்பு சீரகம் நான்கையும் சேர்த்து போட வேண்டும். அதேபோல் அன்று மாலை விளக்கேற்றும் போதும் இந்த தூபத்தை போடுங்கள் இதைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். உங்கள் வீட்டில் வாஸ்துவினால் ஏற்படும் மிகப்பெரிய தொல்லைகள், மன உளைச்சல்கள், நஷ்டங்கள், நோய் எதுவாயினும் சரியாகும். இந்த தூபம் போடுவதால் வாஸ்து தோஷம் நீங்குவதுடன் லஷ்மி கடாக்ஷமும் பெருகும்.

இந்த நான்கு பொருட்களையும் நீங்கள் எப்போதும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு உங்கள் பூஜை அறையில் கூட வைத்துக் கொள்ளுங்கள் . வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி போடும் போது கொஞ்சம் இதை சேர்த்து போட்டு வாருங்கள். வாஸ்து தோஷத்தால் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கி நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ இந்த தூபம் வழி வகுக்கும்.

- Advertisement -