உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளதா? எந்தவித செலவும் இல்லாமல் அதனை உடனே சரிசெய்ய இந்த ஒரு பரிகாரத்தை செய்திடுங்கள்

vasthu
- Advertisement -

இருக்கும் இடத்தில் அழகான வீட்டை கட்டி மகிழ்ச்சியாக வாழ, ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து தனக்கு பிடித்த கனவு இல்லத்தை உருவாக்குகின்றனர். ஆனால் சிறிது காலத்தில் அந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ஒரு சிலர் அந்த வீட்டை பார்வையிட்டு அங்கு சமையல் அறையை வேறு திசையில் அமைக்கவேண்டும், படுக்கை அறையை வேறு திசைக்கு மாற்ற வேண்டும், நீங்கள் பூஜை அறை வைத்திருக்கும் இடம் சரியில்லை என்று வாஸ்து படி அந்த வீட்டின் அமைப்பைப் பற்றிக் கூறுவார்கள். இவ்வாறு வீட்டிற்குள் இருக்கும் வாஸ்து தோஷத்தை சரிசெய்ய இந்த எளிய பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்திடுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

home

இதனைக் கேட்கும் வீட்டின் நபர்களுக்கு சற்று குழப்பம் தான் ஏற்படும். வாஸ்து என்பது உண்மைதான். ஆனால் அதற்காக கட்டிய வீட்டை தலைகீழாக மாற்ற முடியாது. வாஸ்து பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். செல்வ வளம் சேரும். வாஸ்துபடி வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய பல எளிய பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் இது தான்.

- Advertisement -

அதற்கு முதலில் ஒரு கொட்டாங்குச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். அது சரியான அளவில் இருக்க வேண்டும். அதிலும் மூன்று கண் இருக்குமாறு உள்ள கொட்டாங்குச்சியை இதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் களிமண் அல்லது மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி இந்த கொட்டாங்குச்சியை வைப்பதற்கான ஒரு மனை போன்ற அமைப்பை செய்ய வேண்டும். வேறு எந்த இடத்திலும் இருந்தால் கொட்டாங்குச்சியை வைக்கக் கூடாது.

kottaguchi

பின்னர் அந்த கொட்டாங்குச்சிக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு அதனுள் விளக்கெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு திருமூக்கு என்கின்ற பொருளை விளக்கெண்ணெயில் வைத்து, பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த திருமுக்கை பயன்படுத்தினால் மட்டுமே தீபம் நடுவில் நேராக எரியும்.

- Advertisement -

இவ்வாறு தீபம் ஏற்றி வைத்து படுக்கை அறை பூஜை அறை படி இருக்கின்ற இடம் இவற்றில் எந்த இடத்தில் வாஸ்து பிரச்சினை இருக்கின்றதோ அங்கு வைக்கலாம் அல்லது பொதுவாக வீட்டின் கூட்டத்தின் நடுவிலும் ஏற்றி வைக்கலாம். இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் வாஸ்துவிற்க்கு உரியவரான வாஸ்து புருஷருக்கு இந்த ஒளி வீசப்பட்டு அவரது மனது சாந்தமடையும்.

vasthu-vastu

இந்த ஒளியின் மகிமையால் மனமகிழ்ந்து வாஸ்து புருஷர் நமது வீட்டின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடுவார். வாஸ்து புருஷர் முடிவு செய்தால் மட்டும் போதும். எந்தவித வாஸ்து தோஷமாக இருந்தாலும் அது சரியாகிவிடும். எனவே இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள். உங்களின் வீட்டில் மன மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். இத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -