வற்றாத செல்வத்தை தரும் ஒரே ஒரு சுருக்குப்பை. இந்த பை உங்கள் வீட்டில் இருந்தால்,  ஊற்றெடுக்கும் நீர் போல, பணம் சுரந்து கொண்டே இருக்கும்.

kubera
- Advertisement -

செலவுக்கேற்ற வருமானம் வருகிறது என்று கோடீஸ்வரனின் வாயில் கூட வரவே வராது. எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் போதவில்லை, பற்றவில்லை, பற்றாக்குறை, இல்லை, என்ற வார்த்தை மட்டும்தான் ஒருவரின் வாயிலிருந்து வருகிறது. ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவனும் பணம் இல்லை என்று தான் சொல்கின்றான். இருபதாயிரம் சம்பளம் வாங்குபனும் பணம் இல்லை என்று தான் சொல்கின்றான். ஏன் கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பவன் கூட அவனுக்கு பண பற்றாக்குறை இருப்பதாகத்தான் சொல்லுகின்றான்.

இப்படி பணம் இல்லை என்று சொல்பவனுக்கு வாழ்க்கையில் நிம்மதி என்பதும் நிச்சயம் இருக்காது. அளவான வருமானமாக இருந்தாலும், என்னிடம் தேவைக்கு ஏற்ப பணம் இருக்குது. அதை வைத்து நான் சந்தோஷமாக வாழ்கின்றேன் என்று மனநிறைவோடு இருப்பவன் தான் உண்மையான கோடீஸ்வரன்.

- Advertisement -

நீங்களும் இனி இல்லை என்ற வார்த்தையை மறந்து விட்டு வாழ்க்கையில் இருப்பதை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்திப் பாருங்கள். நிச்சயம் ஐஸ்வரியம் உங்களுடைய வீட்டில் பெருகும். சந்தோஷம் நிலையாக தங்கும். சரி இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கு பணம் தான் பிரதானமாக தேவைப்படுகிறது. நல்ல படிப்பு, நல்ல வீடு, நல்ல ஆரோக்கியம், நல்ல ஆடை, நல்ல சாப்பாடு, என்று எல்லா தேவைகளுக்கும் பணத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த செலவை குறைக்க, வருமானத்தை பெருக்க ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

பணம் தங்க சுருக்கு பை பரிகாரம்:
பச்சை நிறத்தில் ஒரு சுருக்கு பை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பட்டு துணையாக இருந்தாலும் சரி, காட்டன் துணியாக இருந்தாலும் சரி, வெல்வெட் துணியாக இருந்தாலும் சரி, அந்த சுருக்குப்பை தயார் செய்வது உங்களுடைய சௌகரியம். அந்தப் பையில் கல்லுப்பு 1 ஸ்பூன், விரலி மஞ்சள் 1, மிளகு 3, மருதாணி விதை 1 ஸ்பூன், அளவு போட்டு எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து விடுங்கள். இதன் உள்ளே 11 ரூபாயை வைத்து சுருக்கு பையை கட்டி அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த சுருக்குப்பை உங்களுக்கு வருமானத்தை பெருக்கி கொடுக்கும். செலவுகளை குறைத்துக் கொடுக்கும்.

- Advertisement -

அந்த காலத்தில் ராஜாக்கள் வீட்டில் செல்வ வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய பானையில் கல் உப்பு, மிளகு, மஞ்சள், மருதாணி விதை, போன்ற பொருட்களை ஒன்றாக போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் அது இன்று சாத்தியம் கிடையாது. பெரிய பெரிய பானையை எல்லாம் வீட்டில் வைத்து நம்மால் பராமரிக்க முடியாது.

அதனால்தான் குபேரருக்கு சொந்தமான பச்சை நிற சுருக்குப் பையில் இந்த பொருட்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அதில் கொஞ்சம் காசையும் போட்டு வைத்தால் நம்முடைய வீட்டிலும் செல்வ வளம் கொழிக்கும் என்பதற்காகத்தான், பெரிய அளவிலான பரிகாரம் சுருக்கமாக உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சம். மிளகு எதிர்மறை ஆற்றலை விளக்கக் கூடியது. மஞ்சள் தூள் மங்கலகரத்தை கொடுக்கக் கூடியது. மருதாணி விதை அஷ்ட ஐஸ்வரியத்தையும் கொண்டு வந்து ஈர்த்துக் கொண்டு உங்கள் வீட்டு பீரோவில் தங்க வைத்துவிடும். இந்த சுருக்கு பையை நீங்கள் எந்த இடத்தில் வைத்தாலும், அந்த இடத்தில் இருக்கும் பொருள் பல மடங்காக பெருகும்.

இதையும் படிக்கலாமே: தினமும் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வேண்டி கொண்டு ஊற்றினால் தீராத கடனும் தீர்வதோடு, இனி கடன் வாங்கும் சூழ்நிலையை இல்லாத அளவிற்கு பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

தங்க நகை பெட்டியில் வைத்தால், தங்க நகை அதிகம் சேரும். சமையலறையில் வைத்தால் வீட்டில் தானியத்திற்கு பஞ்சம் இருக்காது. குழந்தைகள் படிக்கும் இடத்தில் வைத்தால் சரஸ்வதி கடாட்சம் பெருகும். தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழிலில் பல மடங்க லாபம் கிடைக்கும்.

இப்படி எந்த தேவை உங்களுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த தேவையை பல மடங்காக உயர்த்திக்கொள்ள இந்த சுருக்கு பையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -