அள்ள அள்ள குறையாத வற்றாத செல்வ வளத்திற்கு வெள்ளிக்கிழமை பூஜையிலே இதை வைத்து வழிபடுங்கள்!

lakshmi-panjamirtham
- Advertisement -

‘இறைக்கிற கிணறு தான் ஊறும்’ என்று கூறுவார்கள். பணத்தை இறைக்க இறைக்க தான் உங்களுக்கு அது திரும்ப உங்களிடம் கிடைக்கும். தேக்கி வைக்கும் எந்த ஒரு பொருளும், அப்படியே தேங்கி நின்று விடுமே தவிர பெரிதாக செய்யாது என்பதை உணர்த்தக் கூடிய அற்புதமான ஒரு விஷயம் தான் பூஜை செய்வது. பூஜை செய்யும் பொழுது மனம் ஒன்று படுகிறது. இனிப்பான பொருட்களை நைவேத்யம் படைத்து மகாலட்சுமி பூஜை செய்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத வற்றாத செல்வ மழை பொழியும் என்பது உறுதி! வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மி பூஜை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வற்றாத நீர் ஊற்றை போல ஊறக்கூடிய செல்வத்தை கொடுக்க மகாலட்சுமி பூஜை கண்டிப்பாக வீட்டில் செய்வது உசிதமானது. வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை பெருக்க செய்வது மட்டுமல்ல, நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீக்கி, துஷ்ட சக்திகளை அகற்ற, நல்ல ஆற்றல்களை பெருக செய்யவும் உதவுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வீட்டில் விளக்கு எரிவது, தூப புகை பரவுவதும் துர் தேவதைகளை, துர் சக்திகளையும் வெளியில் விரட்டுவதற்கு செய்யப்படுகிறது. பெருமாள் தன் மார்பில் ஏந்திய மஹாலக்ஷ்மியை, நாம் வெள்ளிக் கிழமையில் ஆராதிப்பது மூலம் நம்முடைய செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பது ஒரு ஐதீகம். இந்த பூஜையின் பொழுது வீட்டை கல் உப்பு கலந்த தண்ணீரால் நன்கு துடைக்க வேண்டும்.

பின்னர் பல காய்கள் போட்டு வைக்கப்பட்ட சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை நிவேதனம் வைத்து பூஜைகள் செய்யலாம். அது மட்டுமல்லாமல் பஞ்சாமிர்தம் செய்து வைத்தால் நம் தடைகளை அகற்றி குடும்பத்தில் ஏற்படும் கசப்பான சம்பவங்களை நீக்கி, இனிப்பான நல்ல விஷயங்களை அருளக் கூடிய அற்புதமான பரிகாரமாக இருக்கும். பெருமாளுக்கு உரிய துளசி தீர்த்தம் வைத்து பூஜை செய்வது விசேஷமானது. அதில் கொஞ்சம் பச்சை கற்பூரம், ஏலக்காய் போட்டு பாருங்கள், பணத்தை எங்கிருந்தாவது இழுத்துக் கொண்டு வந்து நமக்கு கொடுத்து விடும்.

- Advertisement -

வர வேண்டிய பணம் வராமல் இருப்பது, இழந்த பொருட்கள், செல்வங்கள் மீட்டுக் கொடுப்பது, வீண் விரயம் ஆகாமல் இருப்பது போன்ற பண ரீதியான நல்ல விஷயங்களை கொடுக்கக் கூடிய சக்தி இந்த இனிப்பான பொருட்களுக்கு உண்டு. அதனால் தான் பூஜை செய்யும் பொழுது டைமண்ட் கல்கண்டு வைக்க சொல்லுவார்கள். டைமண்ட் கல்கண்டு பணத்தை ஈர்க்கக் கூடிய ஆற்றல் படைத்தது. அது மட்டுமல்லாமல் சர்க்கரை பொங்கல் நைவேத்யம் வைத்து படைத்தால் மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து நமக்கு வர வேண்டிய பணத் தொகை விரைவாக வந்து சேரும்.

இந்த வகையில் பஞ்சாமிர்தம் வைத்து முருகன் அருளையும், மகாலட்சுமியின் அருளையும் பெற்றுக் கொள்வது விசேஷமானது. இதனால் சொந்த வீடு கட்டும் எண்ணம் உடையவர்கள், மனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், திருமண தடைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் குழந்தை பேரு இல்லாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இது போல நெய் தீபம் ஏற்றி வீட்டிலேயே எளிமையாக பஞ்சாமிர்தம், கல்கண்டு, சர்க்கரை பொங்கல் போன்ற இனிப்பான விஷயங்களை நைவேத்தியமாக படைத்து பூஜித்து வந்தால் வீட்டில் மழழை செல்வம் விரைவில் தவழும்.

- Advertisement -