வாழ்க்கை எப்போதும் ரத்தினக் கல் போல பளபளப்பாக ஜொலித்துக் கொண்டே இருக்க ரகசிய பரிகாரம். இந்த விஷயம் தெரிந்தால் குப்பையில் தூக்கிப் போடும் இந்த பொருளைக் கொண்டு வந்து லாக்கரில் வெச்சுபீங்க.

mahalashmi1
- Advertisement -

வாழ்க்கை ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்து வருபவர்களுடைய வாழ்க்கை எப்போதும் ஜொலித்துக் கொண்டே இருக்கும். மங்கி போகாது. கஷ்டம் வராது. வீட்டில் இருக்கும் மூத்த தேவி என்று சொல்லப்படும் மூதேவியாகப்பட்டவள் விரட்டி அடிக்கப்படுவாள். உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் முழுமையாக விலகிவிடும். வாழ்க்கை ரத்தினக்கல் போல பளபளப்பாக ஜொலிக்க, செய்ய வேண்டிய பரிகாரத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் மாதுளைபழம், மாதுளை பழத்தின் தோல். மாதுளை பழத்திற்கு உள்ளே இருக்கும் முத்துக்கள் எல்லாம், ரத்தின கற்களுக்கு இணையானவை. வெள்ளிக்கிழமை என்றால் உங்கள் வீட்டில் மகாலட்சுமிக்கு பூஜை செய்யும்போது ஒரு கிண்ணத்தில் மாதுளை பழ முத்துக்களை போட்டு அதை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பூஜையை முடித்துவிட்டு இந்த மாதுளம் பழங்களை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு விட வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்கும். சந்தோஷம் பெருகும். பண கஷ்டம் வராது.

அடுத்தபடியாக இந்த மாதுளம் பழ தோலை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவோம். அப்படி போடாதீங்க. அந்த தோலை நன்றாக வெயிலில் காய வைத்து விடுங்கள். காய்ந்த மாதுளம் தோல்களை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டு, நைசாக பொடித்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலை நீங்கள் குளிக்கின்ற வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த மாதுளம் பழத்தோல் தூளை கொஞ்சமாக, 1 ஸ்பூன் அளவு போட்டு கலந்து தலைக்கு குளித்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த மாதுளம் பழ தோல் கலந்த தண்ணீரில் நீங்கள் குளித்து வந்தால், உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் நீங்கும். சோம்பேறித்தனப்பட்டு நீங்கள் ஓய்ந்து போய் உட்காரவே மாட்டீங்க. உங்களுடைய வீட்டில் சுறுசுறுப்பாக இயங்கி எல்லா வேலைகளையும் பம்பரம் போல சுழன்று சுழன்று செய்ய தொடங்கி விடுவீர்கள். சோம்பேறித்தனம் நம் வீட்டை விட்டும், நம் உடம்பை விட்டும் வெளியேறி விட்டால் பிறகு வாழ்வில் முன்னேறுவதற்கு எந்த தடையும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: கந்தக் கடவுளுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இதில் தீபம் ஏற்றினாலே போதும். நிலம் சொத்து தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சொந்த வீட்டில் அமோகமாக வாழலாம்.

சில மனிதர்களை ராசியான மனிதர்கள் என்று சொல்லுவோம். சில மனிதர்களை ராசி இல்லாதவன் என்று சொல்லுவோம். கடவுள் படைக்கும் போது எல்லா மனிதர்களையும் ராசியானவர்களாக, அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக தான் படைக்கின்றான். ஆனால் அந்த அதிர்ஷ்டமும் ராசியும் காலப்போக்கில் செயல்படாமல் நின்று விடுகின்றது. செயல்படாமல் இருக்கும் சக்கரங்களை செயல்பட வைத்து உங்களையும் ராசியாக்கக்கூடிய வித்தை இந்த பரிகாரத்தில் மறைந்துள்ளது. முயற்சி செய்து பாருங்கள் ஐந்து வெள்ளிக்கிழமை இந்த தண்ணீரில் குளிக்கும் போது உங்களால் நல்ல வித்தியாசத்தை உணர முடியும் நம்பிக்கை உள்ளவர்கள். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -