கந்தக் கடவுளுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இதில் தீபம் ஏற்றினாலே போதும். நிலம் சொத்து தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சொந்த வீட்டில் அமோகமாக வாழலாம்.

murugan-vilakku
- Advertisement -

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்நாள் கனவாகவே இருந்தாலும் கூட, எல்லோருக்கும் இந்த கனவு நிறைவேறுவது கிடையாது. இதில் வீடு கட்டுவதற்கான வசதி இல்லாமல் இருப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், கையில் பணமே இருந்தும் வீடு கட்ட முடியாமல் தவிப்பவர்களும் ஏராளம். சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்றால் அதற்குரிய யோகம் இருந்தால் மட்டுமே முடியும். அந்த யோகத்தை பெறுவதற்கான ஒரு பரிகார தீபத்தை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

இந்த பரிகாரத்தை கட்டிய வீடு பாதியில் நின்று விடுவது, நிலமிருக்கும் அதில் வீடு கட்ட முடியாது, பணம் இருந்தும் நிலமோ வீடோ அமையாது. இப்படியான பிரச்சனை உள்ளவர்கள் இந்த தீபத்தை ஆறுவாரங்கள் ஏற்றும் போது அனைத்தும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீடு நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர துவரை தீபம்
நிலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாக நாம் அங்கார காரகனை தான் வணங்க வேண்டும். ஒவ்வொரு கிரகத்திற்கும் மூல கடவுள் என ஒருவர் உண்டு. அப்படி இந்த அங்காரகாரரின் மூலகாரகன் ஆக விளங்குபவர் முருகப்பெருமான். ஆகையால் இவரை வணங்குவதன் மூலம் அங்காரகரின் அருளை பெற்று இந்த பிரச்சனைகளை நாம் சரி செய்து கொள்ளலாம்.

இந்த தீபத்தை முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டில் ஏற்றலாம் அல்லது கோவிலில் அங்காரகன் முன்பாகவும் ஏற்றலாம். இதை உங்களின் வசதிக்கேற்ப செய்து கொள்ளுங்கள். முதல் வாரம் வீட்டில் ஏற்றினால் ஆறு வாரங்களும் வீட்டில் தான் ஏற்ற வேண்டும். அதே போல கோவிலில் ஏற்றினால் ஆறு வாரங்களும் கோவிலில் தான் ஏற்ற வேண்டும். இதை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கைப்பிடி மைசூர் பருப்பு வேண்டும். அந்த பருப்பு கிடைத்தால் மிகவும் நல்லது. அது இல்லையெனில் தோல் உரிக்காத முழு துவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் மட்டும் நம் சமையலுக்கு பயன்படுத்தும் துவரையை பயன்படுத்துங்கள். இந்தப் பரிகாரத்திற்கு முடிந்த அளவுக்கு மைசூர் பருப்பைக் கொண்டு ஏற்ற முயற்சி செய்யுங்கள்.

ஒரு சின்ன தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுவதுமாக பருப்பை நிரப்பிய பிறகு அதன் மேல் சிறிய அகல் ஒன்றை எடுத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு வைத்து விடுங்கள். இந்த தட்டை முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி இந்த தீபத்தின் முன்பாக உங்களின் நிலம் தொடர்பான பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கோவிலில் இந்த தீபத்தை ஏற்றுவதால் ஒரு சிறிய பேப்பர் தட்டில் துவரை வைத்து அதற்கு மேல் இந்த அகல் வைத்து தீபம் ஏற்றி வணங்கி 11 முறை சுற்றி வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் இந்த 10 தவறுகளை செய்யாவிட்டால் அவர்கள் கையில் பணம் அதிகம் புழங்குமாம்! மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்குமாம் தெரியுமா?

நிலம் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமின்றி குழந்தை பாக்கியம், திருமண தடை போன்றவை எல்லாம் கூட சரியாக இந்த தீபத்தை ஏற்றி வணங்கலாம். இந்த தீபத்தை ஆறு வாரங்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும் அடுத்த வாரம் தீபம் ஏற்றும் வரை இந்த துவரை படத்தின் முன்பாகவே இருக்கட்டும். இந்த இதுவரை தீபத்தை ஏற்றி முருகப்பெருமானின் அருள் ஆசையோடு சொந்த வீட்டில் வாழும் யோகத்தை பெற்று நிம்மதியாக வாழுங்கள்.

- Advertisement -