வருடகணக்கில் சொட்டையாகவே இருக்கும் இடத்தில் கூட கடகடவென, கருகருவென முடியை வளர வைக்கும் கருவேப்பிலை. இதை எப்படி தலையில் ப்ராபரா போடணும். தெரிஞ்சுக்கலாம் வாங்க.

hair fall
- Advertisement -

முடியின் அடர்த்தி குறைய குறைய தான் தலையில் ஆங்காங்கே வழுக்கை தெரிய தொடங்கிவிடும். நிறைய பேருக்கு தலையில் எண்ணெய் வைத்து சீவவே முடியாது. அப்படி எண்ணெய் வைத்து சீவினால் தலையில் நன்றாக ஸ்கேல்ப் தெரியும். ஆகவே, வெளியில் செல்ல வேண்டும் என்றால் தலைக்கு குளித்துவிட்டு தான் செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கும். முடி உதிர்வும் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கும். இப்படி முடி பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு ஒரு எளிமையான அழகு குறிப்பு தான் இன்று இந்த அழகு குறிப்பில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வழுக்கையான ஸ்கேல்பிலும் முடி வளர அழகு குறிப்பு:
இதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் கருவாப்பிலை. கருவேப்பிலையை எடுத்து வந்து சுத்தமான தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் இந்த கருவேப்பிலைகளை போட்டு மிகக் குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அரைத்த இந்த கருவாப்பிலையை நன்றாக பிழிந்து அந்த சாற்றை மட்டும் வடிகட்டிக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டாம். அந்த கருவாப்பிலையின் எசன்ஸுடன் சாறு நமக்கு கிடைக்க வேண்டும். இந்த கருவேப்பிலை சாறில் கரிசலாங்கண்ணி பவுடர் 1 டேபிள் ஸ்பூன், ஆவாரம் பூ பவுடர் 1 டேபிள் ஸ்பூன், இரண்டையும் இந்த கருவேப்பிலை சாறில் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த ஹேர் பேக் கொஞ்சம் லிக்விட் பதத்தில் தான் நமக்கு கிடைக்கும்.

இப்போது நமக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த இந்த ஹேர் பேக் தயார். இந்த ஹேர் பேக்கை தலையில் போடுவதற்கு முன்பாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து நன்றாக முடிக்கு மசாஜ் செய்துவிட்டு, பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஹேர் பார்க்கை ஸ்கேல்பில் படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளவும்.

- Advertisement -

உங்களுக்கு தலையில் எந்த இடத்தில் எல்லாம் அதிக வழுக்கையாக தெரிகிறதோ, அந்த இடத்தில் எல்லாம் கூடுதல் கவனம் எடுத்து இந்த ஹேர் லிக்விடை அப்ளை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வரக்கூடிய நரைமுடி பிரச்சனையை கூட தடுக்கக்கூடிய சக்தி இந்த ஹேர் பேக்குக்கு உண்டு. உங்களால் கரிசலாங்கண்ணி பொடியையும், ஆவாரம்பூ பொடியையும் வாங்க முடியவில்லை என்றாலும் வெறும் கருவேப்பிலை சாறை மட்டுமாவது எடுத்து இப்படி ஸ்கால்ப்பில் அப்ளை செய்து வர மூன்று மாதத்தில் புதிய முடி வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே: நீங்க தலைக்கு குளிக்க யூஸ் பண்ற ஷாம்பு கூட இந்த ரெண்டு பொருளை மட்டும் கலந்து யூஸ் பண்ணீங்கன்னா உங்க முடியோட அடர்த்தி பல மடங்கு அதிகமாகி பட்டுப் போலவும், மிருதுவாகவும் உங்க முடி இருக்கும்.

இதோடு சேர்த்து டயட்டிலும் கொஞ்சம் மாற்றம் கொண்டு வாருங்கள். கேரட், நீர்மோர், நெல்லிக்காய், பாதாம் பருப்பு, கருவேப்பிலை இவைகளை உங்களுடைய சாப்பாட்டில் தொடர்ந்து மாற்றி மாற்றி சேர்த்து வர தலைமுடி வளர்ச்சியில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன இந்த ஹேர் பேக்கை வாரத்தில் இரண்டு நாள், மூன்று மாதம் போட்டு வந்தாலே சூப்பரான ரிசல்ட்டை பார்க்கலாம். அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -