வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ராசிக்கும் உரிய மலர் வழிபாடு

malargal
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த நேரத்தை பொருத்து அவருக்கு ராசியும் நட்சத்திரமும் அமையும். இந்த ராசி நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பலரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய பரிகாரங்களை மேற்கொள்வார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த ராசிக்காரர்கள் எந்த மலர்களை எந்த தெய்வத்திற்கு வழங்கி வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ஒரு தெய்வத்தை நாம் வழிபடுகிறோம் என்றால் அந்த தெய்வத்திற்காக நாம் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நாம் வாங்கிக் கொடுக்கும் பொருட்களில் மிகவும் முக்கியமானதாக திகழக்கூடியதுதான் மலர்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான மலர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இதில் ஒருவரின் ராசியை வைத்து எந்த மலர்களை வழங்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அந்த மலர்களை குறிப்பிட்ட தெய்வத்திற்கு கொடுத்து வழிபடுவதன் மூலம் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

இந்த மலர்களை நாம் கடையில் இருந்து வாங்கி கொடுப்பதை விட, தோட்டத்திலிருந்து பறித்து கொடுப்பதை விட, அந்த மலர்களுக்குரிய செடியை நாமே நம் வீட்டில் வாங்கி வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து அந்த செடியில் பூக்கும் மலர்களை கொண்டு போய் இறைவனுக்கு சமர்ப்பிப்பது தான் முழுமையான சமர்ப்பணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் கடைகளில் இருந்து வாங்கி கொடுக்கலாம். ஆனால் அதன் பலன் விரைவில் நமக்கு கிடைக்காமல் சற்று கால தாமதமாக கிடைக்கும். சரி இப்பொழுது எந்த ராசிக்காரர்கள் எந்த மலர்களை எந்த தெய்வத்திற்கு வழங்க வேண்டும் என்று பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள் சிவப்பு நிற பூக்களை முருகப்பெருமானுக்கு வழங்க வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளை அல்லது பிங்க் நிற பூக்களை மகாலட்சுமி தாயாருக்கு வழங்க வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் பச்சை நிற இலைகளை பெருமாளுக்கு வழங்க வேண்டும். கடக ராசிக்காரர்கள் வெள்ளை நிற பூக்களை அம்பிகைக்கு கொடுத்து வழிப்பட வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் தங்க நிற பூக்களை சிவபெருமானுக்கு வழங்க வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் பச்சை நிற இலைகளை பெருமாளுக்கு வழங்க வேண்டும்.

- Advertisement -

துலாம் ராசிக்காரர்கள் வெள்ளை நிறம் அல்லது பிங்க் நிற பூக்களை மகாலட்சுமி தாயார் வழங்க வேண்டும். விருச்சக ராசிக்காரர்கள் சிவப்பு மற்றும் ஊதா நிற பூக்களை முருகப் பெருமானுக்கு வழங்க வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற பூக்களை நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானுக்கு வழங்க வேண்டும். மகர ராசிக்காரர்கள் கரு நீல பூக்களை சனி பகவான், சிவபெருமான் அல்லது பைரவருக்கு வழங்க வேண்டும்.

கும்ப ராசிக்காரர்களும் கருநீல பூக்களை சனிபகவானுக்கு அல்லது சிவபெருமானுக்கு அல்லது பைரவருக்கு வழங்க வேண்டும். மீன ராசிக்காரர்கள் மஞ்சள் நிற பூக்களை நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு நாம் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு இந்த மலர்களை எடுத்துக்கொண்டு அர்ச்சனை அல்லது சங்கல்பம் செய்து இறைவனின் பாதத்தில் மலர்களை சமர்ப்பித்து தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சுவர்ண தோஷம் நீக்கும் சிவபெருமானின் அபிஷேக பொருள்

இந்த எளிமையான மலர் வழிபாட்டை நாம் அனைவரும் மேற்கொண்டு நம் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைவோம்.

- Advertisement -