சுவர்ண தோஷம் நீக்கும் சிவபெருமானின் அபிஷேக பொருள்

nagai thosam
- Advertisement -

ஒருவருக்கு துன்பமோ, கஷ்டமோ ஏற்படுகிறது என்றால் அதற்கு அவருடைய செயலும் அதனால் ஏற்பட்ட தோஷமும் தான் காரணமாக விளங்குகிறது. அந்த வகையில் ஒருவருடைய வீட்டில் தங்க நகை தங்காமல் போவதற்கு அந்த வீட்டில் இருக்கக்கூடிய சுவர்ண தோஷம் தான் காரணமாக திகழ்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஸ்வர்ண தோஷத்தை நீக்குவதற்கு எந்த பொருளை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக வாங்கி தர வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

யார் வேண்டுமானாலும் நகையை வாங்கலாம், அணியலாம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவர்கள் வாங்கக்கூடிய நகை அவர்களுடனே நிலையாக நிலைத்து நிற்கும். அவ்வாறு நிலையாக இருக்கவில்லை என்றால் அவர்களுக்கு சுவர்ண தோஷம் இருப்பதாக அர்த்தம். இந்த காலத்தில் யார் தான் நகையை அடமானம் வைக்காமல் இருக்கிறார்கள், அனைவரது நகையும் மூழ்கி விடுகிறதா? இல்லையே சிலரது நகை மட்டும் மூழ்க காரணம் அவர்களுக்கு இருக்கும் ஸ்வர்ணதோஷமே.

- Advertisement -

தோஷத்தை நீக்க உதவக்கூடிய தெய்வங்களுள் ஒருவர்தான் சிவபெருமான். ஆதலால் தான் அவருக்கு பிரதோஷ நாள் மிகவும் விசேஷகரமான நாளாக திகழ்கிறது. அப்படி தோஷங்கள் அனைத்தையும் நீக்குபவர் தான் ஸ்வர்ண தோசைத்தையும் நீக்க நமக்கு அருள் புரிகிறார்.

ஒருவருடைய வாழ்க்கையில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் அவரை குரு பகவான் பார்க்க ஆரம்பித்து விட்டார் என்று அர்த்தம். அதனால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறினார்கள். அப்படிப்பட்ட குரு பகவானின் அருள் இருந்தால் தான் நம்மால் தங்க நகைகளை வாங்கவோ நீக்கவோ முடியும். அவருடைய அம்சமாக திகழக் கூடிய ஒரு மங்களகரமான பொருள்தான் மஞ்சள்.

- Advertisement -

மஞ்சள் தூளை குருபகவானின் கிழமையான வியாழக்கிழமை அன்று குரு பகவானின் ஹோரையில் வாங்கி அருகில் இருக்கும் சிவாலயத்தில் சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்வதற்காக வாங்கி தர வேண்டும். அதாவது 50 கிராம் மஞ்சள் தூள் வாங்கினால் இரண்டு 50 கிராம் மஞ்சள் தூளை வாங்கி ஒன்று சிவபெருமானுக்கும் ஒன்று அம்மனுக்கும் என்று தனித்தனியாக தர வேண்டும்.

நேரம் இருந்தால் அந்த அபிஷேகத்தை பார்க்க வேண்டும். நேரம் இல்லாதவர்கள் அபிஷேகத்திற்காக என்று ஐயரிடம் கூறி வழங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 16 வாரங்கள் அபிஷேகத்திற்காக மஞ்சள் தூளை வாங்கி தர வேண்டும்.

- Advertisement -

இப்படி தருவதன் மூலம் சிவபெருமான் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய ஸ்வர்ண தோஷத்தை நீக்குவார். மேலும் குரு பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதால் நம் வாழ்க்கையில் தங்க நகை சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை மீட்பதற்கான வழிகளும் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே: 7 நாட்களில் பணத் தேவையை பூர்த்தி செய்ய பூசணி விதை பரிகாரம்:

இந்த எளிமையான பரிகாரத்தை ஸ்வர்ண தோஷம் இருப்பவர்களோ அல்லது நகையை மீட்க முயற்சி செய்பவர்களோ மேற்கொண்டு தங்கள் வாழ்வில் தங்க நகையை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -