முருகனின் பரிபூரண அருள் கிடைக்க மந்திரம்

murugan matniram
- Advertisement -

பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்களில் முருகப்பெருமான் முதன்மையானவர் என்று சொல்லலாம். ஆகையால் தான் இன்று உலகளாவில் முருகனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அத்துடன் அவருடைய ஆலயத்தில் எந்நேரமும் மக்கள் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

அத்தகைய சக்தி வாய்ந்த முருகப்பெருமானை நாம் வழிபடுவதற்கே அவரின் கருணை வேண்டும். அப்படி வழிபடுவதோடு நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் எல்லாம் நீங்கவும், முருகனின் அருள் ஆசியை பெறவும் முருகனின் அற்புதமான இந்த மந்திரத்தை சொன்னால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முருகனின் அருள் ஆசி பெற மந்திரம்

இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் ஜெபிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் முருகனின் இந்த மூன்று வரி மந்திரத்தை சொல்லி விட்டு பணியை தொடங்குங்கள். அன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் செய்ய விரும்பும் காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நடப்பதோடு வருமானமும் தடையில்லாமல் வரும்.

வேலும் மயிலும் சேவலும் துணை

என்ற இந்த மந்திரத்தை காலையில் கண் விழிக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லிய பிறகு படுக்கையை விட்டு எழுங்கள். அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுங்கள். ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்லும் வேளையில் ஒவ்வொரு முறையும் ஆறு முறை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.

- Advertisement -

இத்துடன் செவ்வாய்க் கிழமையில் முருகர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலை ஆறிலிருந்து ஏழு செவ்வாய் ஹேரையில் இந்த பூஜை செய்ய வேண்டும். அதற்கு முதலில் பூஜையறையில் நட்சத்திர கோலம் போட்டு அதில் ஆறு வெற்றிலை அதன் மேல் அகல் விளக்கை வைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். இந்த வழிபாடு செய்யும் போது கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக வைகுண்ட ஏகாதசியில் பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்

முருகனின் இந்த மந்திரத்தையும் வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வருவோரின் வாழ்க்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவு மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. முருகன் பால் அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள் இந்த வழிபாட்டையும் மந்திரத்தையும் செய்து தங்கள் வாழ்க்கையும் வளமானதாக மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -