முருகப்பெருமானினை இந்தக் கிழமையில் வணங்கி வந்தாலே போதும். சொந்த வீடு வாங்கும் கனவு சீக்கிரத்தில் நினைவாகும்.

murugan-vilakku-sengal
- Advertisement -

சொந்த வீட்டில் வசிப்பது என்பது நம் தாய் நாட்டில் வசிக்கக் கூடிய சுகத்தை நமக்கு தருகிறது. வாடகை வீட்டில் வசிப்பது என்பது அயல்நாட்டில் வசிப்பதற்கு சமம். எத்தனை கட்டுப்பாடுகள். எத்தனை விதிமுறைகள். சுதந்திரமாக நமக்கு பிடித்த எதையும் நம் வீட்டில் செய்ய முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு கட்டுப்பாடுகள். எல்லாவற்றிற்கும் அனுமதி கேட்க வேண்டிய சூழ்நிலை. குழந்தைகள் சுதந்திரமாக சுவற்றில் கிறுக்கு கூட முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் ஆக இருந்தால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஓடியாடி கூட விளையாட முடியாது. அந்த அளவிற்கு சில இடங்களில் சுதந்திரம் பறிபோய் இருக்கும். வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்குத்தான் தெரியும் சொந்த வீட்டின் மகிமை.

veedu

ஒரு சொந்த வீட்டினை வைத்துக்கொண்டு, சொத்துபத்துகாக சண்டை போட்டுக்கொண்டு, வாடகை வீட்டில் போய் குடி இருப்பவர்கள் இதனை உணர்ந்து சொந்த வீட்டில், வரும் வருமானத்தை வைத்து கொண்டு நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு கருத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

- Advertisement -

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற கூடிய அருளாசியை நமக்கு வழங்க வேண்டும் என்றால் அது முருகப்பெருமானால் தான் முடியும். நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும். ஆனால் சரியான முறையில் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறை நிறைய பேருக்கு தெரியவில்லை. பின் வரக்கூடிய வழிபாட்டு முறையை செய்தால் 9 வாரங்களில் உங்களுக்கு சொந்த வீடு யோகம் கிட்ட நிறையவே வாய்ப்பு உள்ளது. அந்த காலத்திலேயே சித்தர்களால் எழுதி வைக்கப்பட்ட பரிகாரம் இது.

முதலில் ஒரு செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமான் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்லும்போது முருகனுக்கு செவ்வரளி பூவை வாங்கி செல்ல வேண்டும். கூடவே பவள மாலை அல்லது பவள மோதிரத்தை வாங்கி சென்று முருகப்பெருமானின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜையை முடித்துவிட்டு, சுவாமியின் பாதங்களில் வைத்த பவள மாலையை வாங்கி உங்களுடைய கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு முன்பாக அமர்ந்து முருகப்பெருமானின் சன்னதியில் மனதார முருகப் பெருமானை நினைத்து ‘ஓம் சரவண பவ’ மந்திரத்தை உச்சரித்து உங்களுக்கு வீடு வாங்கும் யோகம் வரவேண்டும் என்ற பிரார்த்தனையை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

murugan

பிரார்த்தனை முடிந்தது நீங்கள் வீடு திரும்பி விடுவீர்கள். ஒரு செவ்வாய்க்கிழமை முருகருடைய வழிபாட்டை மேல் சொன்னபடி முடித்துவிட்டு, அதன் பின்பு தொடர்ந்து ஒன்பது வாரம் தினம் தினம் வீட்டில் பின் சொல்லக்கூடிய பூஜையை மேற்கொள்ளவேண்டும். (ஒன்பது வாரம் வரக் கூடிய செவ்வாய்க் கிழமை மட்டும் பின் சொல்லக்கூடிய இந்த பூஜையை செய்ய கூடாது. தினம் தினம் பூஜை செய்ய வேண்டும். பூஜையை தொடங்குவதற்கு முன் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானிடம் ஆசிர்வாதத்தை பெறுவதற்காகத்தான் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் முருகன் கோவிலுக்கு செல்கின்றோம்.)

pavalam

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். இந்த பூஜைக்கு உங்கள் வீட்டு பூஜையறையில் கட்டாயமாக பழனி முருகன் ராஜ அலங்கார திருவுருவப்படம் இருக்கவேண்டும். அந்த படத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் தீபம் ஏற்றி வைத்து விட்டு, முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து கொண்டு ‘ஓம் சரவண பவ’ மந்திரத்தைச் சொல்லி வீடு கிடைக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். (தினசரி பூஜையின் போது முருகப்பெருமானின் பாதங்களில் வைத்த பவள மாலை கழுத்தில் இருக்க வேண்டும்.)

ஒன்பது வாரம் முடிந்தவுடன் பழனிக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்து உங்கள் பரிகார பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வீடு வாங்க கூடிய யோகம் எந்த ஒரு ரூபத்திலாவது உங்களைத் தேடி வரும். உங்களுக்கு வீடு நிலம் வாங்குவதற்கு கையில் ஒரு பைசா கூட இல்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கான வருமானத்தை அந்த முருகப்பெருமான் தேடித் தருவார். சொந்த வீடு கட்டுவதற்கான முழு முயற்சியில் நீங்கள் ஈடுபடும் பட்சத்தில் மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -