சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் வெகு சீக்கிரத்தில் உங்களைத் தேடி வர இந்த ஒரு பொருளை பசு மாட்டிற்கு இப்படி சாப்பிட கொடுங்கள்.

house
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை கனவு இருக்கின்றது. நம்முடைய வீட்டிற்கு யாராவது நெருக்கமான சொந்தக்காரர்கள் நண்பர்கள் வந்தால் முதலில் கேட்பது ‘இது உங்கள் சொந்த வீடா’ என்று தானே. நமக்கு ஒரு கௌரவத்தை கொடுக்கக் கூடிய அளவிற்கு சொந்த வீடு என்ற ஒரு விஷயம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. பெரும்பாலும் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு அதனுடைய அருமை பெருமை தெரியாமல் இருக்கலாம். ஆனால் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு தான் அந்த சொந்த இடத்தின் அருமை புரிகின்றது.

எப்போதுமே ஒரு பொருள் இருக்கும்போது அதனுடைய அருமை தெரியாது அல்லவா. அப்படித் தான் இதுவும். சரி பரிகாரத்தை பார்த்து விடுவோம். சொந்த வீடு அமைய மிக மிக சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். ஏதாவது ஒரு வழியில் அந்த ஆண்டவன் உங்களுக்கு சொந்த வீடு யோகத்தை கொடுப்பான்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள். ஒரு கைப்பிடி நவதானியம். 2 வாழைப்பழம், ஒரு சிறிய துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, வாழை இலை, தலைவாழை இலை ஆக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பூஜை அறையிலேயே அமர்ந்து கொள்ளலாம். பூஜை அறையில் அமர்ந்து வாழை இலையை விரித்து, அதில் நவதானியத்தை கொட்டி லேசாக பரப்பி உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் அதன் மேலே ‘வீடு’ என்று எழுதி விடுங்கள்.

நெல்லை பரப்பி கொட்டி அதன் மேலே எழுத படிக்க தொடங்கும் போது அ எழுதுவோம் அல்லவா. அதே போல் தான் நவதானியத்தின் மேலே வீடு என்று எழுதிவிட்டு, அந்த நவதானியத்திற்கு நடுவே இரண்டு வாழைப்பழம், சிறிதளவு வெல்லம், வைத்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு வாசனை மிகுந்த தூபம் போட்டு இந்த இலைக்கு முன்பு நீங்கள் அமர்ந்து வீடு வேண்டும் என்று குலதெய்வத்திடம் இந்த பிரபஞ்சத்திடம் மனமார பிரார்த்தனை செய்து வேண்டுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடங்கள் ஆத்மார்த்தமாக வேண்டுதலை முடித்துவிட்டு இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். தலை வாழை இலையில் இருக்கும் பொருட்களை அப்படியே இலையுடன் எடுத்து ஒரு பையிலோ ஒரு கவரிலோ போட்டுக் கொண்டு போங்கள். எந்த இடத்தில் பசுமாடு இருக்கிறதோ, அந்த பசு மாட்டிற்கு இந்த பொருட்களை எல்லாம் சாப்பிட கொடுத்து விட்டு வாருங்கள். அவ்வளவு தான். 21 வெள்ளிக்கிழமை இந்த பூஜையை மன நிறைவோடு செய்து வந்தால் உங்களுடைய சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு ஏதாவது ஒரு ரூபத்தில் நனவாக மாறும்.

வீடு வாங்க தேவையான அத்தனை முயற்சிகளும் நீங்கள் தான் மேற்கொண்டே வரவேண்டும். உங்களிடம் பத்து ரூபாய் கூட சேமிப்பு இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து வாருங்கள். வருமானத்திற்கு உண்டான வழியை சேமிப்புக்கு உண்டான வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும். மனதில் ஆழமாக பதிந்திருக்க வேண்டியது வீடு வாங்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் தான். மற்ற கவலையே வேண்டாம். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உங்களுக்கு கை மேல் பலன் உண்டு நம்பிக்கை உடையவர்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -