இந்த 1 செங்கல் இருந்தாலே போதும். சொந்த வீடு கட்டி, அதில் நீங்கள் கம்பீரமாக அமரலாம்.

house1
- Advertisement -

ஒரே ஒரு செங்கலை வைத்து எப்படி சொந்த வீடு கட்டுவது, என்று யோசிக்கிறீர்களா. நம்பிக்கை இருந்தால் உடைந்த 4 கற்களை வைத்து கூட வீடு கட்டிவிட முடியும். அது எப்படி? நிறைய கோவில்களில் நாம் பார்த்திருப்போம். கோவிலுக்குப் பின்னால் உள்ள வெற்றிடத்தில், இருக்கக் கூடிய உடைந்த சிறு கற்களை, மக்கள் நம்பிக்கையோடு 3 கற்கள், 5 கற்கள் என்று அடுக்கி வைத்துவிட்டு, வீடு கட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். வீடு கட்டும் யோகமே இல்லாதவர்கள் கூட, நம்பிக்கையோடு இந்த உடைந்த கற்களை அடுக்கி வைத்து, வீடு கட்ட வேண்டும் என்று வேண்டி கொண்டு, சொந்த வீடு கனவை நிஜமாக்கி உள்ளார்கள்.

அப்படி இருக்கும்போது ஒரு செங்கலை வைத்து நம்பிக்கையோடு பூஜை செய்தால் நம்மால் சொந்த வீடு வாங்க முடியாதா என்ன. நிச்சயம் முடியும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனது நிறைய இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். நிச்சயமாக ஒருநாள் நீங்கள் ராஜா போல சொந்த வீட்டில் அமர தான் போகிறீர்கள்.

- Advertisement -

நல்ல முகூர்த்த நாளாக பார்த்து ஒரு செங்கல்லை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். அந்த செங்கல்லை மஞ்சள் தண்ணீரால் சுத்தமாக கழுவி விட்டு, அதில் கொஞ்சம் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இந்த செங்கல்லை பூமா தேவியாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பூமி வாங்கக் கூடிய யோகத்தை அந்த பூமித்தாய் தரவேண்டும் என்று தினம்தோறும் இந்த செங்கல்லினை மனதார வணங்கி வரவேண்டும்.

veedu

இந்த செங்கல்க்கு என்று தனியாக பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. தினமும் பூஜை அறையில் தீபம் ஏற்றும் போது, சுவாமி படங்களுக்கு ஊதவத்தி காண்பிக்கும் போது, இந்தச் செங்கல்லுக்கும் தூபம் காண்பித்து, பூமாதேவி தாயையும், குல தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, முழு நம்பிக்கையுடன் வீடு கட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும்.

- Advertisement -

கூடிய சீக்கிரம் நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகமும் உங்களை வந்து அடையும். சிலபேர் கட்டிய வீட்டை கூட வாங்குவார்கள். உங்களுடைய கனவு நனவாகி விட்டது நிலமும் வாங்கி விட்டீர்கள் அதில் வீடு கட்டவும் தொடங்கப் போகிறீர்கள் என்றால், பூமி பூஜை போடும் போது வீடுகட்ட கட்ட கடக்கால் எழுப்பும் போது, முதன் முதலாக இந்த கல்லை வைத்து, கடைக்கால் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிய வீட்டில் நீங்கள் குடியேறினால் இந்த கல்லை பத்திரப்படுத்தி பரண் மேல் வைத்துக்கொள்ளலாம். வாங்கிய வீட்டில் ஏதாவது பழுது சரி பார்க்கும் போது, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்தில் இந்த கல்லை அந்த வீட்டோடு சேர்த்து கட்டி வைத்து விட வேண்டும்.

boomadevi1

இன்னைக்கு நிறைய பேரோட கனவே இந்த சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான். அந்தக் கனவை நிஜமாக்குவதற்கு தாந்திரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சக்தி வாய்ந்த சுலபமான படங்களில் இதுவும் ஒன்று. உங்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால், வீடுகட்ட நிலம் வாங்க எடுக்கக்கூடிய முயற்சியோடு இந்த பூஜையும் செய்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் கனவு பலிக்க அந்த ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -