வீடு கட்டும் யோகத்தைத் தரும் வாழைமர பரிகாரம்

vazhai maram veedu
- Advertisement -

சாதாரணமான மக்கள் முதல் பெரிய பணக்காரர்கள் வரை ஆசைப்படுவது சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி அதில் வாழ வேண்டும் என்பது தான். ஏனெனில் வாடகை வீட்டில் ஒவ்வொரு நாளும் வாழ்வது எத்தனை சிரமம் என்பது அதில் வாழ்பவருக்கு தான் தெரியும். இது சாதாரணமானவர்களுக்கு பொருந்தும். வசதி படைத்தவர்கள் கூட கையில் பணம் இருந்தும் வீடு கட்டக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருப்பார்கள்.

இன்னும் சிலருக்கு ஜாதகத்தில் சொந்த வீடுக்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கும். அப்படியானவர்கள் எல்லாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போது சொந்த வீட்டில் வாழக் கூடிய யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் இந்த பரிகாரத்தை செய்த ஒன்பது வாரத்திற்குள்ளாகவே நல்ல பலனை எதிர்பார்க்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சொந்த வீடு கட்ட பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்ய முதலில் வாழைமரம் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த மரம் இல்லா விட்டால் பரிகாரத்தை செய்ய முடியாது. இதில் இன்னொரு காரியம் இந்த பரிகாரம் சொந்தமாக நிலம் வாங்கி அதில் வீடு கட்ட முடியாதவர்களுக்கு தான் பொருந்தும். ஏனெனில் உங்களுடைய நிலத்தில் வாழை மரத்தை நட்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் ஒரு வாழை மரத்தை உங்கள் நிலத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் நட்டு வைத்து விடுங்கள். இது தான் பரிகாரத்தின் முதல் படி. அடுத்து செவ்வாய்க்கிழமை அன்று சிகப்பு நிற துவரம் பருப்பு சிறிதளவு கையில் எடுத்துக் கொண்டு நீங்கள் நட்டிருக்கும் வாழை மர இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அதாவது உங்களுடைய சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

இதை கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்த்து செய்யும் போது அதிகப்படியான பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. கையில் கொண்டு சென்ற துவரம் பருப்பை வாழை மரத்தடியில் இருக்கும் மண் மேலே சுற்றி தூவி விட்டு மரத்தின் அடியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அப்படி வணங்கும் போது எங்களுக்கு வீடு கட்டக்கூடிய யோகத்தை தர வேண்டும் என்று வேண்டிக் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பரிகாரங்கள் செய்து முடிவதற்குள்ளாகவே வீடு கட்டுவதற்கான யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி ஜாதகத்தில் வீடு கட்டுவதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் கூட வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாழைமரமானது குருபகவானுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர முருகன் கோவில் பரிகாரம்

அது மட்டும் இன்றி செவ்வாய்க்கிழமை அங்காரகாரகன், முருகர் இருவருக்கும் உகந்த நாள். நீங்கள் பயன்படுத்தும் இந்த துவரம் பருப்பு அங்காரகாரனுக்கு உரியது. இதனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த பரிகாரம் உங்கள் சொந்த வீட்டு கனவை நிச்சயம் நிறைவேற்றி தரும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -