கடன் தீர முருகன் கோவில் பரிகாரம்

murugan cash
- Advertisement -

கடன் என்ற இந்த வார்த்தையை யாராலும் அத்தனை சுலபமாக கடந்து விட முடியாது. ஒருவருடைய வாழ்க்கையே புரட்டி போடக் கூடிய பல விஷயங்களில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கடன் தான். அத்தகைய கடன் தொல்லையால் காணாமல் போன குடும்பங்கள் பல உண்டு. இன்றளவும் கடனால் நிம்மதி இல்லாமல் தினம் தினம் துன்பப்படும் குடும்பங்களும் இருக்கிறது.

அத்தகைய துயரத்தை தரக் கூடிய கடன் தொல்லையிலிருந்து நீங்க தெய்வ வழிப்பாடுகள் பரிகாரங்கள் என பல இருந்தாலும் அனைத்தையம் எல்லோராலும் செய்ய முடியாது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் உள்ள எளிமையான பரிகாரத்தை அனைவரும் செய்யலாம். இதற்கென எந்த செலவும் இல்லை சிரமமும் இல்லை என்றே சொல்லலாம். அது என்ன என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்

கடன் தீர செய்யக் கூடிய இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வாழ்க்கையில் கடன் தொல்லை தீர வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதற்கான வேண்டுதலை செவ்வாய்க்கிழமையில் முருகருக்கு வைப்பது தான் சிறப்பு. ஏனெனில் இந்த கடன் தொல்லையில் இருந்து விடுவிக்க கூடிய ஆற்றல் செவ்வாய் கிரகத்திற்கு அதிகம் உண்டு. ஆகையால் தான் கடனை திருப்பி அடைப்பதற்கான முயற்சிகளை செவ்வாய்க்கிழமையில் எடுக்க வேண்டும்.

அந்த செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக விளங்க கூடியவர் முருகப்பெருமான். அவருக்கும் உகந்த நாளெனில் அது செவ்வாய்க்கிழமை தான். இத்தனை சிறப்பு அம்சங்கள் பொருந்திய இந்த செவ்வாய்க்கிழமையில் தான் நாம் கடன் தீர இந்த வழிபாட்டையும் செய்ய வேண்டும். இந்த வழிபாடு செய்ய செவ்வாய்க்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு பூஜை அறையில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு முருகன் நாணயத்திற்கு செல்லுங்கள். அங்கு முருகப்பெருமான் முன்பாக ஒரு அகல் தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு முகமாக இருப்பது போல ஏற்றி வையுங்கள். தீபம் ஏற்றிய பிறகு முருகன் சன்னதியை 12 முறை வலம் வர வேண்டும்.

இத்தனை முறை வலம் வர வேண்டியது ஒரு கணக்கு. ஆகையால் அதில் ஒரு சுற்று கூட குறையக் கூடாது. 12 சுற்றுகள் சரியாக சுற்ற வேண்டும். அப்படி சுற்றும் வேளையில் உங்களுடைய கடன் அடைய வேண்டும் என்று முருகப்பெருமானை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஆலயத்தில் முருகப்பெருமானை பார்த்தபடி நீங்களும் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்படி குறைந்தது அரை மணி நேரமாவது நீங்கள் அந்த ஆலயத்தில் இருக்க வேண்டும். 12 முறை சுற்றிய பிறகு அமர்ந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்த பிறகு நீங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் பொழுது கடன் தொல்லை அடைய வாய்ப்பு வருவதை நீங்களே உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: ராஜயோக வாழ்க்கை அமைய அமாவாசை பரிகாரம்

கடன் அடைய வேண்டுமெனில் வருமானம் பெருக வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் போது முருகன் அருளால் உங்களுக்கு வருமானத்தை பெருக்கக் கூடிய வாய்ப்புகள் நிச்சயம் உண்டாகும். அப்படி உண்டாகும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு கடனை அடைத்து மகிழ்ச்சியாக வாழ வழி தேடிக் கொள்ளுங்கள்.

- Advertisement -