நீண்ட நாட்களாக காலியாக இருக்கும் வீட்டிற்கு கூட உடனடியாக நல்ல குடித்தனம் வரும். காலியான வீட்டில் இந்த சிலையை வைத்து பாருங்கள்.

nanthi
- Advertisement -

நிறைய பேர் வாடகை விடுவதற்காக வீடு கடை கட்டி வைத்து இருப்பார்கள். ஆனால் அதில் குடி வருவதற்கு நல்ல ஆட்கள் வரவே மாட்டார்கள். நீண்ட நாட்களாக வாடகை வராமல் வீடும், கடையும் சும்மாவே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க சின்ன பரிகாரம் ஒன்றைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாடகைக்கு நல்ல குடிதனம் வரவேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நல்ல வீடு கிடைக்க வேண்டும் என்றும், இருந்த இடத்திலிருந்து இந்த பரிகாரத்தை செய்தால் நமக்கு குடி போவதற்கு நல்ல வீடும் கிடைக்கும்.

உங்களுடைய வீடோ அல்லது கடையோ காலியாக உள்ளது. அதற்கு குடித்தனம் வர வேண்டும் என்றால் என்ன செய்வது. முதலில் காலியாக இருக்கக்கூடிய அந்த இடத்தை நன்றாக ஒட்டடை அடித்து சுத்தம் செய்து விடுங்கள். அதன் பின்பு அந்த வீட்டுக்குள் ஏதாவது ஒரு தீர்த்தம் தெளிக்க வேண்டும். உங்களுடைய வீட்டின் அருகில் கோவில் இருந்தால் அந்த கோவிலில் இருந்து கொஞ்சம் தீர்த்தத்தை வாங்கி வந்து தெளிக்கலாம். அப்படி இல்லை என்றால் மஞ்சள் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு, குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் தெளித்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு நந்தியின் சிலை இதற்காக நமக்குத் தேவை. பரிகாரத்திற்காக புதியதாக நந்தி சிலை வாங்கினாலும் தவறு கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் நந்தி சிலையை வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பீங்கான், பித்தளை, கண்ணாடி இப்படி எந்த நந்தி சிலையையும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 11 மிளகு போட்டு, அதன் உள்ளே நந்தியை அமர வைத்து, கொண்டு போய் காலியாக இருக்கும் வீட்டில் கிழக்கு பார்த்தபடி வைத்து விடுங்கள்.

இந்த சிலையை வைத்துவிட்டு உங்களுடைய வீட்டிற்கு நல்ல குடித்தனம் வர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த கற்பூரமுமோ, அல்லது ஊதுவத்தையோ காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த சிலை, பூட்டி இருக்கும் வீட்டில் அப்படியே இருக்கட்டும். (காலியாக இருக்கும் வீட்டில் வைத்த இந்த நந்தி சிலைக்கு தினம் தினம் பூஜை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. வாரத்தில் இரண்டு நாள் செவ்வாய் வெள்ளிக்கிழமை அந்த சிலையை எடுத்து சுத்தம் செய்து மீண்டும் அந்த கிண்ணத்திலேயே வைத்து விடலாம்.) கூடிய சீக்கிரம் உங்களுடைய வீட்டிற்கு நல்ல குடித்தனம் வரும்.

- Advertisement -

யாராவது வீட்டிற்கு குடி வருவதற்கு முன்பு, அதாவது வாடகைக்கு வரப் போகிறார்கள் என்ற போது, சிறியதாக வெற்றிலை பாக்கு பூ பழம் போட்டு சின்ன பூஜை செய்துவிட்டு அந்த நந்தியை கொண்டு போய் மீண்டும் உங்களுடைய வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள். இதே போல தான் கடை காலியாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

நீங்கள் இப்போது ஒரு வீட்டில் குடி இருக்கிறீர்கள். இன்னொரு வாடகை வீடு தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல வீடாக அமையவில்லை என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே சிறிய கிண்ணத்தில் இப்படி நந்தியை வைத்து, அதன் உள்ளே 11 மிளகு போட்டு தினந்தினம் அந்த நந்திக்கு காலையில் எழுந்து தீபம் ஏற்றி மனதார உங்களுடைய வேண்டுதலை சொல்ல வேண்டும். எனக்கு நல்ல வீடு கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, பிறகு உங்களுடைய தினசரி வேலையை தொடங்குங்கள். நிச்சயமாக கூடிய விரைவில் உங்களுக்கு வேறு ஒரு நல்ல வீடு கிடைக்கும். வேறு ஒரு நல்ல வீடு கிடைக்கும் வரை இந்த வீட்டில் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தெம்பும் கிடைக்கும். அதற்கான வழியை நந்தி தேவர் உங்களுக்கு காட்டி கொடுப்பார்.

பரிகாரத்தை நிறைவு செய்யும்போது, நந்தி சிலையை உங்களுடைய வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு, உங்களுக்கு நல்ல வீடு கிடைத்த பின்பு நந்திக்கு உள்ளே போட்டிருக்கும் மிளகை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -