பரம ஏழையாக இருந்தாலும் நீங்கள் நிச்சயமாக வீடு வாங்குவது உறுதி. 9 வாரங்கள் வாராகி வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.

Varahi-amman
- Advertisement -

வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்யலாம். உங்களுடைய நம்பிக்கையும் ஆசையும் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும். வாராஹி அம்மனை நினைத்து இந்த பூஜையை ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் செய்து வந்தால். பின் சொல்லக்கூடிய பூஜையை வீட்டில் இருந்தபடியேவும் செய்யலாம். அல்லது உங்கள் வீட்டினருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்றும் செய்யலாம். அது அவரவர் சவுகரியத்தைப் பொறுத்ததுதான்.

உங்களுடைய வீட்டில் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்றால் வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து எந்தவித பயமும் இல்லாமல் பூஜையை தொடங்கலாம். வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய மன தயக்கம் கொண்டவர்கள், உங்களுடைய வீட்டில் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி அந்தச் சுடரைக் அம்மனாக பாவித்து இந்த பூஜை செய்வதன் மூலம் முழு பலன் கிடைக்கும்.

- Advertisement -

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்ய வேண்டும். பூஜைக்கு முன்பு ஒருமுறை சுத்தமாக குளித்து விட வேண்டும். உங்களுடைய வீடும் நீங்களும், உங்கள் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடுத்தபடியாக, குளித்து முடித்து வந்த பிறகு பெண்களாக இருந்தால் குங்கும பொட்டு இட்டுக்கொண்டு, அதன் பின்பு சிறிதளவு அரகஜாவை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் வெறும் அரகஜா, விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும்.

Varahi amman

வாராஹி அம்மனுக்கு 9 வாரம் செவ்வாய்க் கிழமையிலும், 9 வகையான பிரசாதங்களை நிவேதனமாக வைக்கலாம். பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் வராகி அம்மனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்றால் வாராஹி அம்மனுக்கு மிகமிகப் பிடிக்கும். மரவள்ளி கிழங்கு, சேனை கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு இந்த கிழங்குகளை கூட வேகவைத்து பிரசாதமாக வைக்கலாம். பழங்களில் மாதுளை பழம் அம்மனுக்கு உகந்த பழமாக சொல்லப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் பூக்களால் வாராஹி அம்மனுக்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். எப்போதும்போல பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு பூஜையறையில் அமர்ந்து பின் வரக்கூடிய மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

ஓம் குண்டலினி புரவாசினி, சண்டமுண்ட விநாசினி,
பண்டிதஸ்ய மனோன்மணி,
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி, அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி, வாராஹீ நமோஸ்துதே!

மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு மனதார உங்களுடைய வேண்டுதலை வாராகி தாயிடம் சொல்லுங்கள். உங்களை பெற்ற அன்னையை போல், வாராஹி தாயை நினைத்துக்கொண்டு கஷ்டங்களை சொல்லுங்கள். நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்களுக்கு அந்த தாய் செவி சாய்ப்பாள். குழந்தை குணம் கொண்ட வாராஹி தேவியை நம்பியவர்கள் யாருமே கைவிடப்பட்டது இல்லை.

- Advertisement -

இறுதியாக கற்பூர ஆராதனை காட்டி இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை செய்தாலும் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றிக் கொள்ளலாம். கோவிலுக்கு சென்று பூஜை செய்வதாக இருந்தாலும் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தது விட்டு பிரசாதத்தை நிவேதனமாக வைத்து அம்பாளை வழிபாடு செய்துவிட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு நிவேதிதை பிரசாதமாக விநியோகம் செய்யலாம்.

இந்த வழிபாடு ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம்‌. பெண்களாக இருந்தால் மாதவிடாய் நாட்களில் இந்த வழிபாட்டை தவிர்த்துவிட்டு அடுத்து வரக்கூடிய வாரத்தை கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் கட்டாயமாக ஒன்பது வாரம் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பாருங்கள்.

புதியதாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், கட்டிய வீடு பாதியிலேயே நிற்கிறது, வீடு கட்ட வங்கியில் கடன் கிடைக்க, இப்படி பூமி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த பரிகாரம் செய்வதன் மூலம் கைமேல் பலன் உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -