சொந்த வீடு அமைய முருகர் வழிபாடு

murugar sontha veedu
- Advertisement -

காக்கை குருவிகள் கூட தனக்கென சொந்தமாக கூடு கட்டி வாழக்கூடிய சூழ்நிலையில் மனிதனாகி பிறந்த நாம் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. சொந்த வீடு வாங்க வேண்டும் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற கனவு இன்று பல பேருடைய தூக்கத்தை தொலைப்பதாக உள்ளது. ஏனெனில் வாடகை வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அங்கு படும் துன்பத்தை சொல்லி மாளாது.

அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளுடன் சேர்த்து முருகப்பெருமானை தொடர்ந்து வழிபட வேண்டும். ஏனெனில் நிலம் வீடு வாசல் யோகத்தை ஏற்படுத்தக் கூடிய பூமி காரர்களான செவ்வாய் கிரகத்தில் அதிபதியான கடவுள் முருகர்.

- Advertisement -

இந்த முருகப்பெருமானை தொடர்ந்து வழிபடும் போது நிலம் வீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அப்படியான ஒரு வழிப்பாட்டு முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சொந்த வீடு அமைய வழிபாடு

இந்த வழிபாடு செய்வதற்கு நாளைய தினம் உகந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய்க்கிழமை எப்படி விசேஷமானதோ அதேபோல தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய் கிழமை இன்னும் அதிக பலனை தருவதாக உள்ளது. ஆகையால் இந்த வழிபாட்டை நாளைய தினத்தில் துவங்குவது நம்முடைய கனவை சீக்கிரத்தில் நினைவாக்கும் யோகத்தை தரும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமையும் காலையில் வரும் செவ்வாய் ஹோரையான 6 லிருந்து 7 செய்வது சிறந்தது. அதை தவற விட்டால் மதியம் 1லிருந்து 2 அல்லது இரவு 8 லிருந்து 9 இந்த நேரத்திற்குள் செய்து விடுங்கள். இதைத் தவிர மற்ற நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யக் கூடாது.

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய மண் பாத்திரத்திரம் அல்லது கண்ணாடி பவுல், பீங்கான் பவுல் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த மூன்றை தவிர வேறு உலோகங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த மண் பாத்திரம் நிறைய கல் உப்பை நிரப்பி விடுங்கள். அடுத்து நல்ல தரமான தேங்காயாக ஒன்றை பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தேங்காயை நன்றாக சுத்தம் செய்து கழுவி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காயை நாம் எடுத்து வைத்திருக்கும் உப்பின் மீது நிற்க வைக்க வேண்டும். மூன்று கண்கள் இருக்கும் குடுமி பகுதி மேல் நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தேங்காய்க்கு செவ்வரளி பூவை வைப்பது நல்லது இல்லை என்றால் வேறு என்ன மலர் உள்ளதோ அதை தேங்காய் மீதும் உப்பின் மீதும் சுற்றி வைத்து விடுங்கள்.

உப்பின் மீது இருக்கும் தேங்காய்க்கு முன்பாக ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். முருகப்பெருமானை மனதார நினைத்து உங்கள் சொந்த வீடு நினைவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். தேங்காயில் இருக்கும் பூவை மட்டும் தினம் மாற்றி விடுங்கள்.

அதே போல பூஜை செய்யும் போது இந்த தேங்காய்க்கும் கற்பூர தீபாராதனை காட்டி உங்கள் வேண்டுதலை தினம் தோறும் முருகப்பெருமானிடம் சொல்லி வாருங்கள். இடையில் தேங்காய் அழுகி விட்டாலும் அல்லது விரிசல் விட்டாலும் தேங்காய் எடுத்துவிட்டு புதிதாக தேங்காய் மாற்றி விடுங்கள் தவறில்லை.

அப்படி மாற்றும் போது இந்த தேங்காய் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஹோரையில் மாற்ற வேண்டும். ஒன்பது வாரங்கள் 9 ரூபாய் சேரும் இந்த நாணயத்தை முருகர் கோவிலில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டை ஒன்பது வாரங்கள் செய்து முடிப்பதற்குள்ளாகவே உங்களின் சொந்த வீடு கனவுகள் நினைவாக கூடிய வாய்ப்பு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -