வீண் விரயத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்க இரவு தூங்கும் போது இந்த பொருளை தலையணை அடியில் வைத்து உறங்கி விடுங்கள்.

jathagam-sleeping
- Advertisement -

வீண் விரயம் என்பது நாம் சொல்லும் பொழுது வேண்டுமானால் தேவையில்லாத செலவு என்று பொதுவாக சொல்லி விடலாம். இந்த வீண் விரயம் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நம்மை ஒன்றும் இல்லாமல் கடன்காரர்களாக கொண்டு போய் நிறுத்தி விடும். ஒருவருக்கு வீண் விரயங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால் அவர்களுடைய வருமானம் போதாது என்பதோடு, பணத்தை சேர்த்து வைக்கவும் முடியாது. இதனால் வெளியில் பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். அதன் பிறகு அதை சமாளிக்க மேலும் கடன் என எங்கோ கொண்டு நிறுத்தி விடும்.

virali manjal

இதன் காரணமாக மன உளைச்சலும் பெரும் அளவு அதிகரித்து இரவில் படுத்தால் தூக்கம் வராது. இதனால் வருமானம் போதாமல் போவதுடன் உடல் நலக் கோளாறும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பொதுவாக இந்த வீண் விரயங்கள் என்பது பணத்தை சரியான முறையில் செலவு செய்ய தெரியாமல் இருப்பது என்பது பொதுவான கருத்து. ஆனால் ஒரு சில நேரங்களில் கிரக மாற்றங்களினாலும் இது போல செலவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் கையில் நீங்களா நினைத்தாலும் பணத்தை சேமிக்க முடியாது ஏதாவது விரைய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இதை சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகார முறை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

ஒருவர் அதிக அளவில் கடனில் சிக்குவதும் இது போல் செலவினங்கள் அதிகரித்து துன்பப்படுவதும், சுப செலவுகள் இல்லாமல் விரைய செலவுகளாக போவதும் நிம்மதி இழப்பதும் ஒரு வகையில் நம்முடைய கிரகங்களின் கோளாறு தான் என்று சொல்லப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்ய விரலி மஞ்சள் போதும் என்றும், அது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

mudichu

வீண் விரயத்தை தடுக்க
இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஐந்து விரலி மஞ்சள் கையில் இருந்தால் போதும். ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நினைத்து அதில் இந்த ஐந்து விரலி மஞ்சள் வைத்து மூட்டையாக கட்டி இரவு படுக்கும் போது தலையணை வடிவில் வைத்து விடுங்கள். இதை ஒரு வாரம் தொடர்ந்து வைக்க வேண்டும். இந்த மஞ்சள் மூட்டையை திங்கட்கிழமை வைத்தீர்களானால் அடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இதை வைத்திருந்து திங்கட்கிழமை காலையில் கால் படாத இடத்தில் எடுத்து போட்டு விட வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு திங்கட்கிழமை இரவு புதிதாக வேறு மஞ்சள் மூட்டை கட்டி தலையணை அடியில் வைத்து உறங்கினால் இது போல கிரகங்களினால் ஏற்படும் வீண் விரயங்கள் உடல் நல கோளாறுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியாக உறங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த பரிகாரம் பெரிதும் உதவி செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பர்ஸில் இருக்கும் கடைசி 10 ரூபாய் செலவு ஆவதற்குள், 100 ரூபாய் கை செலவுக்கு வந்து சேரும். இந்த ஒரு பொருள் உங்கள் பர்சஸுக்குள் இருந்தால்.

இந்த மஞ்சள் முட்டை பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து உங்களுடைய வீண் செலவுகள் உடல்நல கோளாறு போன்ற கிரக கோரலாரினால் ஏற்படும் செலவினங்களை தடுத்து நல்ல முறையில் வருமானத்தை ஈட்டி வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -