இந்த இலையை உங்கள் கையோடு எடுத்துச் சென்றால் போதும். நீங்கள் செல்லும் காரியம் நிச்சயமாக வெற்றி அடையும்.

amman
- Advertisement -

நாம் எந்த ஒரு நல்ல காரியத்திற்கு வெளியே செல்வதாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் வீட்டிலிருந்து கிளம்புவோம். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் நாம் செல்லக்கூடிய காரியங்கள் தடைபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சி, கண்ணுக்கு தெரியாத எந்த வித எதிர்மறை சக்தியினாளும் தடை பட்டுவிடக் கூடாது என்றால், உங்களுடன் நீங்கள் எந்த இலையை எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு பாதுகாப்பு வளையத்தை கொடுக்கக்கூடிய அந்த இலை எந்த இலை என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா.

veppilai-water

பெண்கள், குழந்தைகள் வெளியிடங்களுக்கு செல்லும்போதும் அவர்களுக்கு பாதுகாப்பிற்காகவும் இந்த இலையை அவர்களுடைய கையோடு எடுத்துச் செல்லலாம். நாம் எந்த சூழ்நிலையில் எங்கு சென்றாலும், நம்முடன் காவல் தெய்வமாக நின்று நம்மை பாதுகாக்கக் கூடியசக்திவாய்ந்த அந்த இலை வேப்ப இலைகள் தான்.

- Advertisement -

அந்த அம்பாளின் சொரூபமாக கருதப்படும் வேப்பிலை நமக்கு பாதுகாப்பு தரக்கூடியதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள் வீட்டு வாசலில், கட்டாயமாக இந்த வேப்பமரம் இருக்கும். வீட்டில் உள்ள பெண்கள் குழந்தைகள் வெளியில் செல்வதாக இருந்தால் அந்த வேப்பிலையில் நுனியில் இருக்கக்கூடிய மூன்று நிலைகளை உடைத்து தங்கள் தலையிலோ அல்லது இடுப்பிலோ அல்லது பையிலோ வைத்துக்கொண்டு தான் செல்வார்கள்.

veepilai

அப்படி அந்த வேப்ப இலைகளை உடைத்து கூடவே எடுத்துச் செல்லும்போது சக்தி தேவியை வேண்டி ‘ஓம் சக்தி’ என்ற வார்த்தையை உச்சரித்து அம்பாளை வேண்டி ஒரு சங்கல்பம் எடுத்துக் கொள்வார்களாம். அதாவது ‘பராசக்தி தாயே நாங்கள் செல்லக் கூடிய காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டும். எல்லா வற்றையும் நீயே பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டால் போதும் பாரத்தை அம்மன் காலடியில் இறக்கி வைத்ததாக அர்த்தம். மீதம் இருப்பதை அந்த அம்பாள் பார்த்துக் கொள்வாள் என்பது தான் இதனுடைய அர்த்தமும் நம்பிக்கையும் ஆக இருந்து வந்தது.

- Advertisement -

காலப்போக்கில் இந்த பழக்கம் எல்லாமே மாறிவிட்டது. அதற்கேற்றவாறு நம்முடன் பிரச்சனைகளும் தொற்றிக்கொண்டது. அழகாக அலங்காரம் செய்து கொண்டு ஏதாவது ஒரு விசேஷத்திற்கு சென்று வந்தால் கூட வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெண்களுக்கு உடல் உபாதைகள் வந்து விடுகிறது. வீட்டில் வயதுக்கு வந்த கன்னிப்பெண்கள் நேரங்கெட்ட நேரத்தில் வெளியே சென்று வரும்போது பிரச்சனைகள் அவர்களை தொடர்கின்றது. காரணம் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் தான். கண் திருஷ்டியின் தாக்கம் தான். பாதுகாப்பு கவசமாக நம் கையில் எதையுமே எடுத்துச் செல்வதில்லை.

ஏதாவது ஒரு முக்கியமான வேலைக்காக பல முறை வெளியே சென்றுவிட்டு வந்தாலும் அந்த வேலையை சரிவர முடிவது கிடையாது. காரணம் நம்முடைய பழக்க வழக்கங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தான். உங்களுடைய மனம் மிக பலவீனமாக இருந்தால், வெளியில் இறுக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத சில எதிர்மறை ஆற்றலின் கோளாறுகளால் உங்களுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படுமேயானால் எப்போதுமே நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது வேப்பிலைகளை உங்களுடன் எடுத்துச் செல்லவேண்டும். கூடவே ஒரு இரும்பு ஆணியையும் எடுத்துச் சென்றால் எதிர்மறை ஆற்றலினால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. நீங்கள் செல்லக்கூடிய காரியத்திலும் எந்த ஒரு தடையும் ஏற்படாது.

irukkankudi-amman

வேப்பிலையை பரித்து உங்களிடம் வைத்துக் கொள்ளும்போது ‘ஓம் சக்தி தாயே’ என்று மனதார நினைத்துக் கொண்டாலே போதும். நீங்கள் ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்து விடுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிறிய பரிகாரத்தை செய்து பயனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -