வரப்போகும் ஆடி வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு இந்த மாலையை போட்டு வேண்டுதல் வையுங்கள். நினைத்தது உடனே நடக்கும். வேண்டிய வரம் உடனே கிடைக்கும்.

amman2
- Advertisement -

ஆடி மாதத்தில் அம்மனை வழிபாடு செய்வதற்கு எத்தனையோ முறைகள் உள்ளன. அதில் சக்திவாய்ந்த சுலபமான ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வரப்போகும் வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை. ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு இந்த மாலையை அணிவித்து, அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் நினைத்த வேண்டுதல், நினைத்த மார்க்கத்தில் உடனே நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. அம்மனுக்கு உகந்த, அம்மனுக்கு மிகவும் பிடித்த அந்த பிரத்தியேகமான மாலை என்ன. அதை எப்படி அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

malai

அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பொருளின் வரிசையில் முதலில் இருப்பது வேப்ப இலை. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆடி வெள்ளி அன்று நம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய பொருள் வேப்ப இலை. அடுத்தபடியாக அம்மனுக்கு உகந்த பொருள் என்றால் அது மஞ்சள். குறிப்பாக விரலி மஞ்சள். அம்மனுக்கு மிகவும் உகந்த பொருளாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மஞ்சள் நூலில் இந்த வேப்ப இலையையும் மஞ்சள் கிழங்கையும் சேர்த்து மாலையாகத் தொடுத்து கோவிலில் உள்ள அம்மனுக்கு சாத்தி உங்களுடைய வேண்டுதலை வைத்தால், அந்த வேண்டுதல் உடனே பலிக்கும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை, கோவிலில் அம்மனுக்கு இந்த மாளிகையை சாத்த முடியவில்லை என்றால் இந்த மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் திருவுருவ படத்திற்கு போட்டு மனதார வேண்டுதல் வைத்தால், வேண்டிய வரத்தை உடனடியாக பெறமுடியும்.

malai1

ஒரு மஞ்சள் நூலை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் வேப்ப இலையை ஒரு முறை வைத்து தொடுக்க வேண்டும். அடுத்தபடியாக ஒரு விரலி மஞ்சளை தொடுக்க வேண்டும். அடுத்து வேப்ப இலை, அடுத்து விரலிமஞ்சள் இப்படி மாறி மாறி மாலையை கட்டிக் கொள்ளுங்கள். மாலையை கட்டும் போது உங்களுடைய வேண்டுதலை மனதார சொல்லிக்கொண்டே இருங்கள். 7, 11, 21 என்ற ஒற்றை படை கணக்கில் மஞ்சள் கொம்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். வேப்ப இலைகளை கணக்கில்லாமல் வைத்து கட்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

இவ்வாறாக அம்மனை மனமுருக வேண்டி ஏதாவது ஒரு பிரார்த்தனையை வைத்து இந்த மாலையை கட்டி அம்மனுக்கு சாத்தி பாருங்கள். நிச்சயமாக நீங்கள் வேண்டிய வேண்டுதலை காண பலன் கூடிய விரைவில் உங்களை வந்து சேரும். குறிப்பாக இந்த மாலையை கோவில் சாத்தும் போது, அம்மனுக்கு கூடவே ஒரு அழகான மஞ்சள் நிற புடவையையும் எடுத்துக்கொடுத்து சாத்தினால் வீட்டில் மங்கள நிகழ்வுகளுக்கு தடை இருக்காது.

virali-manjal

அம்பாள் மனம் மகிழ்ந்து வரங்களை வாரி தந்து விடுவாள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டத்திற்கும் விடிவு காலம் பிறக்கும். இந்த மாலையை, இந்த வெள்ளிக்கிழமை சாத்த முடியாதவர்கள், ஆடி மாதத்தில் அடுத்தடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சாத்தி நல்ல பலனை பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -