நிலை வாசலில் இந்த 2 வேரை ஒன்றாக கட்டி வைத்தாலே போதும். வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய எந்த தடையும் இருக்காது.

lakshmi-door-vasal
- Advertisement -

நல்ல சக்தி என்பது இந்த உலகத்தில் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் இந்த பூமியில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றது. நமக்கு கெட்ட நேரம் வரும்போது, நமக்கு கெடுதல் நடக்கவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படும் போது, தானாகவே எதிர்மறை ஆற்றல்கள் என்று சொல்லப்படும் கெட்ட சக்திகள் நம்மை சுற்றி செயல்பட தொடங்கிவிடும். நன்றாக இருக்கும் குடும்பத்தில் சண்டை வருவது. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் துக்கமான விஷயங்கள் நடப்பது, வருமானம் வந்துகொண்டே இருக்கும் இடத்தில் வருமானம் தடை படுவது, கடன் பிரச்சினை வருவதற்கு காரணமும் இந்த கெட்ட சக்தி என்று சொல்லப்படும் எதிர்மறை ஆற்றல் செய்யக்கூடிய வேலைதான்.

kuppai-meeni1

கெட்ட சக்தியை ஒழித்துக் கட்டுவதற்கு நல்ல சக்தியால் மட்டும்தான் முடியும். எதிர்மறை ஆற்றலை எதிர்த்து போராட வேண்டும் என்றால், நம்முடைய வீட்டில் இறைசக்தியை ஆகர்ஷனம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன.

- Advertisement -

இயற்கையாக நம் பூமியில் விளையக்கூடிய செடி கொடிகளுக்கு ஒரு மகத்துவம் இருக்கத்தான் செய்கின்றது. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பொருட்களின் மகத்துவத்தை அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்களும் சித்தர்களும் நன்றாகவே அறிந்திருந்தார்கள். அந்த வரிசையில் சித்தர்களால் நமக்குச் சொல்லப்பட்ட ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nayuruvi

செந்நாயுருவி வேர், குப்பை மேனி செடியின் வேர். இந்த இரண்டு வேரும் நமக்கு தேவை. பரிகாரத்திற்கு செடியிலிருந்து நாமே வேரை எடுக்க வேண்டும் என்றால், முதலில் செடிக்கு மஞ்சள் நூலால் காப்பு கட்டி, இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, நல்லதுக்காக மட்டுமே இந்த செடியின் வேர் பயன்படுத்தப்படும் என்று சொல்லி அதன் பின்பு அந்த வேரை எடுக்க வேண்டும்.

- Advertisement -

உங்களால் இதை செய்ய முடியவில்லை என்றால், நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த இரண்டு வேரையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் சாபநிவர்த்தி செய்து உங்களுக்கு இந்த இரண்டு வேரையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். வாங்கிவந்த வேரை மஞ்சள் தண்ணீரால் கழுவி, தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்து விட்டு, ஒரு மஞ்சள் துணியில் வைத்து இதனுடன் ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து, சிறிய முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ளுங்கள்.

mahalakshmi1

இந்த முடிச்சை உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும். வெள்ளிக்கிழமை இந்த பரிகார பூஜையை தொடங்குங்கள். வெள்ளி, சனி, ஞாயிறு, 3 நாட்கள் மகாலட்சுமியிடம் இந்த முடிச்சி இருக்கட்டும். மூன்று நாட்களும் தீபமேற்றி முடிச்சுக்கு தூபம் காண்பிக்க வேண்டும்.

vasal-kathavu

திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த மூலிகை வேர் முடிச்சை கொண்டுவந்து, நிலை வாசல்படியில் வெளிப்பக்கத்தில் மாட்டி விடுங்கள். தினம்தோறும் தீபம் ஏற்றும் போது இந்த முடிசுக்கு ஊதுபத்தியை காண்பித்தால் மட்டும் போதும். அவ்வளவு தான்.

உங்களுடைய வீட்டிற்குள் இறைசக்தி எந்த ஒரு தடையும் இருக்காது. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நுழைவதற்கு எந்த தடையும் இருக்காது. இது தவிர தெய்வ சக்தியை மீறி உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் என்று சொல்லப்படும் ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி பொறாமை குணம் கொண்டவர்களின் கண் பார்வை எதுவுமே உங்களை தாக்காமல், இறைசக்தி பார்த்துக்கொள்ளும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -