வீட்டில் இறை சக்தியானது திரை போட்டு மறைக்கப்பட்டிருந்தால் இப்படி தூபம் போடுங்கள். வீட்டில் பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

dhupam
- Advertisement -

சில வீடுகளில் நல்லது நடப்பதற்கு நிறைய தாமதம் எடுக்கும். வீட்டில் இருக்கக்கூடிய இறை சக்தி ஏதோ ஒரு காரணத்தினால் தன்னை திரைபோட்டு மறைத்திருக்கும் போது, வீட்டில் பெரிய போராட்டங்கள் நடக்க தொடங்கிவிடும். எந்த ஒரு நல்லதும் அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது. வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். வீட்டில் இருக்கும் நிம்மதி குறையும். சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் திடீரென்று இப்படிப்பட்ட பிரச்சனைகள் பூதாகரமாக வெடிப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கடந்த சில நாட்களில் எந்தெந்த இடத்திற்கு சென்றீர்கள். எந்தெந்த வேலைகளை செய்தீர்கள் என்பதையும் நினைவு கூற வேண்டும்.

சில பேர் சில தீட்டு வீடுகளுக்கு சென்று வந்து வீட்டை அசுத்தம் செய்திருப்பார்கள். தீட்டு என்றால் பல வகையான தீட்டுகள் உள்ளது. பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த தீட்டு, குழந்தை பிறந்த தீட்டு, இறந்தவர்கள் வீட்டில் இருக்கும் தீட்டு, என்று எத்தனையோ தீட்டு நமக்கு முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. எந்த தீட்டாக இருந்தாலும் சரி, எந்த தீட்டு வீட்டிற்கு நீங்கள் சென்று வந்தாலும் சரி, உங்களை நீங்கள் முதலில் சுத்தம் செய்து கொண்டு, உங்களுடைய வீட்டையும் சுத்தம் செய்து விட வேண்டும். பெரும்பாலும் சில பேருக்கு இந்த தீட்டு என்ற வார்த்தையில் நம்பிக்கை இருக்காது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த குறிப்பு கிடையாது. நம்பிக்கை இருப்பவர்கள் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -

உங்களுடைய குடும்பத்தில், உங்களுடைய சொந்த பந்தங்கள் வீட்டில் சுப தீட்டுக்கு சென்று வந்தாலும், அசுப தீட்டுக்கு சென்று வந்தாலும் உங்களை நீங்கள் முதலில் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது தீட்டு வீட்டிற்கு சென்று வந்த பின்பு வீட்டில் இருக்கக்கூடிய எந்த பொருட்களையும் தொடாமல் குளியல் அறைக்குச் சென்று நீங்கள் உடித்திருந்த ஆடையை தண்ணீரில் நனைத்து அலசி துவைத்து போட்டுவிட்டு நீங்களும் தலைக்கு குளித்து விட வேண்டும்.

இப்படிப்பட்ட தீட்டுகள் ஒரு சிலருக்கு பிரச்சனையை அதிகமாக உண்டு பண்ணும். ஒரு சிலருக்கு பிரச்சனையை உண்டு பண்ணாது. இது இயல்பு. பிரச்சனை வரக்கூடாது என்ற காரணத்திற்காக தான் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் காலை கழுவிக்கொண்டு கொஞ்சம் தீர்த்தத்தை(தண்ணீர்) தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் அந்த பழக்கம் இன்று காணாமலேயே போய்விட்டது.

- Advertisement -

இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று வந்தால் கட்டாயமாக வாசலிலேயே தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு உங்களுடைய ஆடையையும் உங்களையும் நன்றாக நினைத்துக் கொண்டு அதன் பின்பு வீட்டிற்குள் சென்று குளிப்பது உத்தமம்.

அதன் பின்பு வீட்டை சுத்தப்படுத்தி வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு விட வேண்டும். இவ்வளவு செய்தும் உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை தாண்டவம் ஆடுகிறது என்றால் என்ன செய்வது. தொடர்ந்து 8 நாட்கள் உங்களுடைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை இரண்டு வேலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு மணக்க மணக்க வாசம் நிறைந்த சாம்பிராணி புகையை கொல்லப்புறத்தில் இருந்து நிலைவாசல் வரை போட வேண்டும்.

உள்பக்கத்திலிருந்து போட்டு வந்த சாம்பிராணி புகை தூபக்காலை அப்படியே நிலை வாசல் வரை போட்டு, நிலை வாசலுக்கு வெளியே கொண்டு வந்து வைத்து விட வேண்டும். 8 நாட்கள் இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்துவிட்டு, எட்டாவது நாள் மாலை நேரத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று மனதார இறைவனை வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயை சூறை தேங்காயாக உடைத்து விட்டு வர வேண்டும்.

இந்த எட்டு நாளும் உங்கள் வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. இந்த சின்ன பரிகாரத்தை செய்தாலே உங்களை பிடித்து ஆட்டிப் படைக்கும் அந்த தீட்டுத்திடுக்குகள் விலகிவிடும் என்பது நம்பிக்கை. பின்பு இறை சக்தியில் இருக்கக்கூடிய திரை விலகும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க தொடங்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -